பிரதமரின் இலவச சிலிண்டர் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 1,68,313 சமையல் எரிவாயு இணைப்புகள்..!

Scroll Down To Discover
Spread the love

நாடாளுமன்றத்தின் மக்ககளவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இணை அமைச்சர் திரு ராமேஸ்வர் தெலி கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஏற்கனவே வழங்கப்பட்ட 8 கோடி சமையல் எரிவாயு இணைப்புகளுக்கு மேலதிகமாக, 1 கோடி டெபாசிட் இல்லா சமையல் எரிவாயு இணைப்புகளை நாடு முழுவதும் வழங்குவதற்காக உஜ்வாலா 2.0-ஐ 2021 ஆகஸ்ட் 10-ம் தேதி உத்தரப் பிரதேசத்தில் பிரதமர் தொடங்கி வைத்தார்.

உஜ்வாலா 2.0-ன் கீழ், டெபாசிட் இல்லா சமையல் எரிவாயு இணைப்பு, இலவச முதல் உருளை மற்றும் அடுப்பு ஆகியவை பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

உஜ்வாலா 2.0-ன் கீழ் 2021 நவம்பர் 28 வரை நாடு முழுவதும் 78.98 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகளை எண்ணெய் நிறுவனங்கள் வழங்கியுள்ளன. தமிழகத்தில் மட்டும் 1,68,313 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.