மதுரை : கள்ளழகர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.!

Scroll Down To Discover
Spread the love

மதுரை அருகே உள்ளது அழகர் கோவிலாகும். இங்கு இன்று ஆடிபெருக் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதனால், கோட்டை வாசல் முன்பாக பக்தர்கள் உள்ளே விடாமல் பூட்டியதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.பக்தர்கள் நீண்ட நேரம் கர்த்திருந்தனர்.

கொரோனா தடை காலம் என்பதால், பக்தர்கள் கூட்டம் இன்றி, கோயில் வளாகத்திலேயே, ஆடித்திருவிழாவை நடத்த, கோயில் நிர்வாகம் உத்தேசித்துள்ளது. திருவிழாவானது, 10 நாள்கள் சமூக இடைவெளியை பின்பற்றி எளிய முறையில் ஆடித் திருவிழா நடைபெறுகிறது.

இன்று கொடியேற்றம் என்பதால், பக்தர்கள் கூட்டம் கூடியதால், கோயில் வாசல் மூடப்பட்டது.
அரசு விதிமுறைகளை பின்பற்றி,விழா நடைபெறும் என,கோயில் துணை ஆணையர் பொறுப்பு அனிதா தெரிவித்தார்.