மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டை பகுதியில் ரயில் மோதியதில் புள்ளி மான் பரிதாபமாக உயிரிழந்தது. திருமங்கலம் அருகே சிவரக்கோட்டை பகுதியில் ஏராளமான புள்ளி மான்கள் வசித்து வருகின்றன.
இந்த மான்கள் சாலையைக் கடக்கும் போதும், தண்டவாளப்பகுதியைக் கடக்கும் போதும் விபத்தில் சிக்கி பலியாவது தொடர்ந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் இரவு நேரத்தில் வேட்டைக்காரர்களும் மான்களை வேட்டையாடி வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று சிவரக்கோட்டை – கள்ளிக்குடி பகுதியில் உள்ள தண்டவாளத்தை 5 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மான் ஒன்று கடக்க முயன்ற போது அவ்வழியே சென்ற ரயில் மோதியதில் உடல் சிதறி உயிரிழந்தது.
ரயில்வே லைன் மேன் கள்ளிக்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்த தன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றனர். அவர்கள் வனத்துறை அலுவலருக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் மானின் உடலை பிரேத பரிசோதனை செய்த பின்னர் மானின் உடல் புதைக்கப்பட்டது.
செய்தி: Ravi Chandran

														
														
														
Leave your comments here...