ஹோலி பண்டிகை.. ‘மகிழ்ச்சியின் திருவிழா ; நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!

Scroll Down To Discover
Spread the love

ஹோலி பண்டிகை உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தீமையை நன்மை வெற்றி கொண்டதன் நினைவாக கொண்டாடப்படும் இந்த பண்டிகையின்போது மக்கள் ஒருவர் மீதொருவர் வண்ணப்பொடிகளை தூவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். இந்த ஆண்டுக்கான ஹோலி பண்டிகை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில்:- “உங்கள் அனைவருக்கும் மிகவும் இனிய ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள். மகிழ்ச்சி, மேன்மை, சந்தோஷம் மற்றும் உயர்வு ஆகியவற்றின் இந்த திருவிழா அனைவரின் வாழ்க்கையிலும் புதிய வீரியத்தையும் புதிய ஆற்றலையும் ஊக்குவிக்க வேண்டும்” என்று பிரதமர் மோடி இந்தியில் பதிவிட்டுள்ளார்.