இணையத்தின் வழியாக பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி.!

Scroll Down To Discover
Spread the love

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது.

இணையம் வழியாக நடைபெற்ற குறள் ஒப்புவித்தல் போட்டிக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம்,ஆசிரியர்கள் ஸ்ரீதர் , முத்துமீனாள் செய்திருந்தனர்.

இணையம் வழியாக போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் மாலினி, யோகேஸ்வரன், முத்தய்யன் , திவ்யஸ்ரீ , ஹேமலதா, அம்முஸ்ரீ, நதியா, கனிகா ,கனிஷ்கா,தேவதர்ஷினி,வெங்கட்ராமன்,ஈஸ்வரன்,ஜோயல் ரொனால்ட், கீர்த்தியா, ஹரிப்ரியா, சொர்ணமேகா, மகாலெட்சுமி ஆகியோருக்கு பள்ளியின் சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது.