கேரளா தலைமை செயலகத்தில் தீ விபத்து : பாஜக – காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்.!

Scroll Down To Discover
Spread the love

கேரளா தலைமை செயலகத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து நாசமாகின. இந்நிலையில் ஆளும் கட்சியினர் வேண்டுமென்றே தீ விபத்து நாடகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதன் மூலம் தங்க கடத்தல் வழக்கில் முக்கிய ஆவணங்களை அழிக்க திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் மற்றும் பாஜக உறுப்பினர்கள் தலைமை செயலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர் .எனினும் தலைமை செயலக வளாகம் முன் அமர்ந்து இரவு வரை போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து அவர்கள் மீது போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்து விரட்டினர். இந்த போராட்டத்தால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.