போலி ஆதார் அட்டை தயாரித்து சுற்றி வந்த உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நைமோவா ஜெரினா – மதுரை போலீசார் கைது செய்தனர்.!

தமிழகம்

போலி ஆதார் அட்டை தயாரித்து சுற்றி வந்த உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நைமோவா ஜெரினா – மதுரை போலீசார் கைது செய்தனர்.!

போலி ஆதார் அட்டை தயாரித்து சுற்றி வந்த உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நைமோவா ஜெரினா – மதுரை போலீசார் கைது செய்தனர்.!

மதுரையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் வெளிநாட்டு இளம்பெண் ஒருவர் முறையான ஆவணங்களின்றி தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் விடுதிக்கு சென்று பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த நைமோவா ஜெரினா என்பதும், சுற்றுலாவுக்காக இந்தியா வந்த நிலையில், விசா காலம் முடிந்தும் அவர் நாடு திரும்பாமல் இருந்தது தெரியவந்தது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவிற்கு சுற்றுலா விசாவில் வந்த அவர், கடந்தாண்டு மார்ச் மாதத்துடன் விசா காலம் முடிவடைந்த நிலையில் நாடு திரும்பாமல் இந்தியாவிலேயே தங்கியுள்ளார். கடந்த ஓராண்டாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று உள்ள நைமோவா ஜெரினா, பல விடுதிகளில் தங்கி உள்ளார். அவர் தங்குவதற்கு ஏதுவாக போலி ஆதார் அட்டை ஒன்றை தயாரித்து அதை பயன்படுத்தி வந்துள்ளார்.

ஒவ்வொரு பயணத்தின் போதும் இவர் மட்டுமன்றி இவருடன் மேலும் சிலர் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்பதால் என்ன காரணத்திற்காக அவரை ஒவ்வொரு பகுதிக்கும் அழைத்துச் சென்றனர். இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட நகரங்களில் தான் அதிக அளவில் பயணம் செய்துள்ளார்கள் என்பதால் உளவு பார்க்க வந்தவராக இருக்கலாம் என்கிற கோணத்தில் மதுரை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் டெல்லி முகவரியில் போலி ஆதார் அட்டை தயாரித்து பயன்படுத்தியது தெரியவந்ததை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.


Leave your comments here...