வாஜ்பாயின் 101-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
தொலைநோக்கு பார்வை கொண்ட பிரதமராக திகழ்ந்த பாரத ரத்னா வாஜ்பாயின் 100வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இன்று டெல்லியில் உள்ள ‘சதைவ் அடல்’ நினைவிடத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, துணை குடியரசு தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர் தூவி மரியாதை அஞ்சலி செலுத்தினர். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் நல்லாட்சி தினமாகக் கொண்டாடப்படும் நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக, பிரதமர் மோடி சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நாட்டு மக்களின் இதயங்களில் ஆழமாகப் பதிந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் தனது முழு வாழ்க்கையையும் நல்லாட்சி மற்றும் தேசத்திற்காக அர்ப்பணித்தார்.
அவர் ஒரு சக்திவாய்ந்த பேச்சாளராகவும், சக்திவாய்ந்த கவிஞராகவும் எப்போதும் நினைவுகூரப்படுவார். அவரது ஆளுமை, பணி மற்றும் தலைமைத்துவம் நாட்டின் அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கும் வழிகாட்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Leave your comments here...