ஜம்மு காஷ்மீர் புதிய ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம்..!

இந்தியா

ஜம்மு காஷ்மீர் புதிய ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம்..!

ஜம்மு காஷ்மீர் புதிய ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம்..!

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராக பதவி வகித்து வந்த கிரீஷ் சந்திர முர்மு தனது பதவியை ராஜினாமா செய்ததாக நேற்று தகவல்கள் வெளியானது. தனது ராஜினாமா கடிதத்தையும் ஜனாதிபதிக்கு கிரிஷ் சந்திர முர்மு அனுப்பி விட்டதாகவும் கூறப்பட்டது. எனினும், இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, கடந்த ஆண்டு, ஆகஸ்ட் 5ல், ரத்து செய்யப்பட்டது. அதன் பின், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை, தனித்தனி யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.

இந்த நிலையில், கிரிஷ் சந்திர முர்மு ராஜினாமா செய்ததை உறுதி படுத்தும் வகையில், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் புதிய துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார். கிரிஷ் சந்திர முர்மு – வின் ராஜினாமா கடிதத்தை ஏற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், புதிய துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹாவை நியமனம் செய்துள்ளார். 61 வயதான மனோஜ் சின்ஹா உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர், காசியாப்பூர் மக்களவை தொகுதியில் பாஜ.,வில் சார்பில் போட்டியிட்டு, மூன்று முறை எம்.பி.,யாகவும் பதவி வகித்துள்ளார். மேலும், ரயில்வே மற்றும் தொழில்நுட்ப துறையில் இணை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

Leave your comments here...