இந்திய பயன்பாட்டாளர்களின் தகவல்களை எந்தவொரு வெளிநாட்டு அரசுடனும் பகிர்ந்து கொள்ளவில்லை – டிக்டாக் இந்தியாவின் தலைவர் விளக்கம்..!

இந்தியா

இந்திய பயன்பாட்டாளர்களின் தகவல்களை எந்தவொரு வெளிநாட்டு அரசுடனும் பகிர்ந்து கொள்ளவில்லை – டிக்டாக் இந்தியாவின் தலைவர் விளக்கம்..!

இந்திய பயன்பாட்டாளர்களின் தகவல்களை எந்தவொரு வெளிநாட்டு அரசுடனும் பகிர்ந்து கொள்ளவில்லை  – டிக்டாக் இந்தியாவின் தலைவர் விளக்கம்..!

இந்தியாவின் லடாக்கின் கல்வான் பகுதியில் ஐந்து வாரங்களாக இந்திய – சீன படைகள் முகாமிட்டிருந்த நிலையில்,( ஜூன்15) மாலையில், திடீரென மோதல் ஏற்பட்டது. சீன ராணுவம் நடத்திய அட்டூழிய தாக்குதலில், நம் வீரர்கள், 20 பேர் வீரமரணம் அடைந்தனர். எல்லையில் உள்ள நிலையை மாற்றியமைக்க முயன்ற நம் ராணுவத்திற்கு பதிலடி கொடுத்தனர். இதில் 43 சீன வீரர்கள் உயிரிழந்தனர். இதனால், இரு நாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி இந்தியாவில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் டிக்டாக், ஹலோ, ஷேர் இட் உள்பட சீனாவுடன் தொடர்புடைய 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக 275 சீன செயலிகளுக்கு தடை விதிப்பதற்கான ஆலோசனையை தற்போது மத்திய அரசு முன் எடுத்துள்ளது. தற்போது 275 செயலிகள் இந்தியாவின் விதிமுறைகளை மீறும் வகையில் உள்ளதா? என்ற அடிப்படையில் தற்போது ஆய்வுகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

சீனாவின் பீஜிங்கை தலைமையிடமாக கொண்டுள்ள பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான பைட் டான்ஸுக்குச் சொந்தமான டிக்டாக் செயலிக்கு சர்வதேச அளவில் இருக்கும் ஒட்டுமொத்த பயனாளர்களில் பாதிக்கு மேலான பங்களிப்பு இந்தியாவில் இருந்தது.தற்போது விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவால் டிக்டாக் நிறுவனத்துக்கு 6 பில்லியன் டாலர் வரையில் இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் மட்டும் ரூ.44,790 கோடி வரையில் நஷ்டம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டிக்டாக் இந்தியாவின் தலைவர் நிகில் காந்தி, ப்ளாக் (Blog) எனப்படும் வலைப்பதிவில் பதிவிட்டுள்ளதாவது: டிக்டாக் நிறுவனம் இந்திய பயன்பாட்டாளர்களின் தகவல்களை எந்தவொரு வெளிநாட்டு அரசுடனும் பகிர்ந்து கொள்ளவில்லை. எதிர்காலத்தில் கேட்டாலும் அந்த செயலை செய்யாது. எங்கள் செயல்பாடுகளின் காலம் முழுவதும், பயனர்களின் பிரைவசி மற்றும் பாதுகாப்புத் தேவைகள் உள்ளிட்ட உள்ளூர் சட்டங்களுடன் இணங்குவதற்கான தெளிவான உறுதிப்பாட்டை நாங்கள் நிரூபித்துள்ளோம். மத்திய அரசிடம் எங்களைப் பற்றிய தகவல்களைக் கொடுக்கவும், அரசுக்கு பாதுகாப்பு குறித்த தகவல்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Leave your comments here...