கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பியதாக திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் கைது

தமிழகம்

கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பியதாக திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் கைது

கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பியதாக திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் கைது

கடவுள், நாளைய மனிதன், புதிய ஆட்சி, புரட்சிக்காரன், காதல் கதை, ஒரு இயக்குனரின் காதல் டைரி உள்பட பல படங்களை இயக்கியவர் வேலு பிரபாகரன்.ஈ.வே.ரா., கொள்கையை பின்பற்றுபவன் என சொல்லிக் கொண்டு, இந்து மத கடவுள்களையும், மத நம்பிக்கைகளையும் எப்போதும் கேவலமாக பேசுபவர் இயக்குனர் வேலு பிரபாகரன். இவர் இயக்கிய படங்களில் பெரும்பாலும் ஆபாசத்தையும், வக்கிரத்தையும் திணித்து, அதிலும் மத நம்பிக்கையை கெடுக்கும் வேலைகளை செய்து வருபவர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் தன்னை விட 25 வயது இளையவரான நடிகை ஷெர்லிதாசை திருமணம் செய்தார். அவ்வப்போது நாட்டுநடப்புகளை விமர்சித்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.இவர், இப்போது கந்த சஷ்டி கவசத்தை இழிப்படுத்திய கறுப்பர் கூட்டம் சுரேந்தரை ஆதரித்தும், இந்து மதத்தை மீண்டும் கேவலமாக பேசியும் பேட்டி கொடுத்துள்ளார். இது குறித்து இந்து மதத்தையும், மத நம்பிக்கைகளையும் கடுமையாக விமர்சிப்பதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பியதாக திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார். இயக்குனர் வேலு பிரபாகரனை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கருப்பர் கூட்டம் யூ டியூப் சேனலில் இந்து கடவுள்களையும் இழிவுபடுத்தி பேசியதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...