PUBG உட்பட 275 சீன செயலிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டமா…?

இந்தியா

PUBG உட்பட 275 சீன செயலிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டமா…?

PUBG உட்பட 275 சீன செயலிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டமா…?

இந்தியாவின் லடாக்கின் கல்வான் பகுதியில் ஐந்து வாரங்களாக இந்திய – சீன படைகள் முகாமிட்டிருந்த நிலையில்,( ஜூன்15) மாலையில், திடீரென மோதல் ஏற்பட்டது. சீன ராணுவம் நடத்திய அட்டூழிய தாக்குதலில், நம் வீரர்கள், 20 பேர் வீரமரணம் அடைந்தனர். எல்லையில் உள்ள நிலையை மாற்றியமைக்க முயன்ற நம் ராணுவத்திற்கு பதிலடி கொடுத்தனர். இதில் 43 சீன வீரர்கள் உயிரிழந்தனர். இதனால், இரு நாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி இந்தியாவில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் டிக்டாக், ஹலோ, ஷேர் இட் உள்பட சீனாவுடன் தொடர்புடைய 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக 275 சீன செயலிகளுக்கு தடை விதிப்பதற்கான ஆலோசனையை தற்போது மத்திய அரசு முன் எடுத்துள்ளது. தற்போது 275 செயலிகள் இந்தியாவின் விதிமுறைகளை மீறும் வகையில் உள்ளதா? என்ற அடிப்படையில் தற்போது ஆய்வுகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மிக பிரபலமாக பேசப்படும் பப்ஜி விளையாட்டு மற்றும் ஜியோமி, அலி எக்ஸ்பிரஸ், ஸில்லி உள்ளிட்ட நிறுவனங்களின் செயலிகள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே, மத்திய தொழில்நுட்ப அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில், 275 செயலிகளின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கின்றன. எந்த வித தரவுகளை செயலிகள் பெறுகின்றன என்பது குறித்து மத்திய அரசால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த செயலிகள் இந்திய அரசின் விதிகளுக்கு மீறும் பச்சத்தில் தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave your comments here...