பள்ளிப் பாடங்களை 25 சதவீதம் குறைக்க மஹாராஷ்டிரா மாநில பள்ளிக்கல்வித்துறை முடிவு..!

இந்தியா

பள்ளிப் பாடங்களை 25 சதவீதம் குறைக்க மஹாராஷ்டிரா மாநில பள்ளிக்கல்வித்துறை முடிவு..!

பள்ளிப் பாடங்களை 25 சதவீதம் குறைக்க மஹாராஷ்டிரா மாநில பள்ளிக்கல்வித்துறை முடிவு..!

கொரோனா பெரும் தொற்று இந்தியாவில் கோரதாண்டவம் ஆடி வருகிறது. இதையொட்டி கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக நாடு முழுவதும் மூடப்பட்டிருக்கும் கல்வி நிறுவனங்கள் திறப்பு குறித்து மத்திய, மாநில அரசுகள் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.மேலும் பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தை பொறுத்தவரை, கொரோனா வைரஸ் பிரச்சினைகள் முடிந்த பிறகு மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்ட பின், எப்போது பள்ளிகளை திறக்கலாம் என்பது குறித்து ஒரு குழு அமைத்து, ஆய்வு மேற்கொண்ட பின்னர் அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, நடப்புக் கல்வியாண்டில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள பள்ளி பாடங்களை 25 சதவீதம் குறைத்துக் கொள்ளலாம் என மராட்டிய மாநில கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழு தெரிவித்துள்ளது.


இதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மராட்டிய மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வர்சா கெயிக்வாட் தெரிவித்துள்ளார்.மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். எந்தெந்த பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்ற விவரங்கள் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave your comments here...