சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான வழிகாட்டுதல் வெளியீடு – மத்திய உள்துறை அமைச்சகம்

இந்தியா

சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான வழிகாட்டுதல் வெளியீடு – மத்திய உள்துறை அமைச்சகம்

சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான  வழிகாட்டுதல் வெளியீடு – மத்திய  உள்துறை அமைச்சகம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்குள் நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கொரோனா காலத்தில் சுதந்திர தின கொண்டாட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.

• சுதந்திர தினத்தின் போது பெரிய அளவிற்கு மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
• தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும்.
• அனைவரும் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தல்.
•கொரோனா முன்கள பணியாளர்கள் மற்றும் கொரோனாவில் இருந்து மீண்டவர்களையும் கவுரவிக்கும் விதமாக விழாவிற்கு அழைக்க வேண்டும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...