கறுப்பர் கூட்டம் யூட்யூப் சேனலில் இருந்து 500 வீடியோக்கள் நீக்கம் – சென்னை சைபர் கிரைம் போலீஸ் அதிரடி..!

தமிழகம்

கறுப்பர் கூட்டம் யூட்யூப் சேனலில் இருந்து 500 வீடியோக்கள் நீக்கம் – சென்னை சைபர் கிரைம் போலீஸ் அதிரடி..!

கறுப்பர் கூட்டம்  யூட்யூப் சேனலில் இருந்து 500 வீடியோக்கள் நீக்கம் – சென்னை சைபர் கிரைம் போலீஸ் அதிரடி..!

கருப்பா் கூட்டம்’ என்ற பெயரில் செயல்படும் யூ டியூப் சேனலில் இந்து மதக் கடவுள் முருகப் பெருமானையும், கந்த சஷ்டி கவசத்தையும் ஆபாசமாகப் பேசி, அவமதிக்கும் வகையிலும் விடியோ வெளியிட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவா் எம்.என்.ராஜா, வழக்குரைஞா் பிரிவுத் தலைவா் ஆா்.சி.பால்கனகராஜ் ஆகியோா் சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் கடந்த 13-ஆம் தேதி புகாா் அளித்தனா்.

இதுகுறித்து சென்னை மத்தியக் குற்றப் பிரிவு போலீஸாா், ‘கருப்பா் கூட்டம்’ யூ டியூப் சேனல் மீது 5 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, அந்த யூ டியூப் சேனலின் நிா்வாகிகளில் ஒருவராகக் கருதப்படும் சென்னை வேளச்சேரியைச் சோ்ந்த செந்தில்வாசனை (49) புதன்கிழமை இரவு கைது செய்தனா். மேலும், பலரைத் தேடி வந்தனா். அந்த சேனல் நிா்வாகிகளில் ஒருவரான சென்னை ராயப்பேட்டையைச் சோ்ந்த ந.சுரேந்தா் (36) புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள தனது நண்பா்களைச் சந்திக்க வந்த போது, தன்னை போலீஸாா் தேடி வருவதையறிந்து, அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை சரணடைந்தாா். இதுகுறித்து புதுச்சேரி போலீஸாா் சென்னை குற்றப் பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில், அரியாங்குப்பம் காவல் நிலையத்துக்கு வந்த சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல் உதவி ஆணையா் பிரபாகரன் தலைமையிலான போலீஸாா், சுரேந்தரைக் கைது செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றனா். இதையடுத்து சுரேந்தர், சென்னை ராயபுரத்தில் மாஜிஸ்திரேட் ரோஸ்லின் துரை இல்லத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை 30 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.சென்னையில் தி. நகரில் இருக்கும் கறுப்பர் கூட்டம் அலுவலகத்துக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று இரவு சீல் வைத்தனர். கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி இருந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பின்னர், ‘கருப்பர் கூட்டம் சேனலை முடக்க வேண்டும்’ என, அமெரிக்காவில் உள்ள, யு டியூப் நிறுவனத்திற்கு, மின்னஞ்சல் வாயிலாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார், நேற்று கடிதம் எழுதி உள்ளனர்.

இவ்வழக்கு தொடர்பாக ஓட்டேரியைச் சேர்ந்த சோமசுந்தரம், மறைமலை நகரைச் சேர்ந்த குகன் ஆகிய மேலும் 2 பேரை கைது செய்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், கருப்பர் கூட்டம் சேனலில் உள்ள 500க்கும் மேற்பட்ட வீடியோக்களை சைபர் கிரைம் போலீசார் நீக்கியுள்ளனர். சர்ச்சைக்குரிய வீடியோக்கள் இருந்ததால், அந்த வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Leave your comments here...