எல்லையில் நடந்த துப்பாக்கி சண்டையில் உயிரிழந்த ராணுவ வீரர் மதியழகன் மனைவிக்கு அரசு வேலை- முதல்வர் பழனிசாமி உத்தரவு.!

இந்தியாதமிழகம்

எல்லையில் நடந்த துப்பாக்கி சண்டையில் உயிரிழந்த ராணுவ வீரர் மதியழகன் மனைவிக்கு அரசு வேலை- முதல்வர் பழனிசாமி உத்தரவு.!

எல்லையில் நடந்த துப்பாக்கி சண்டையில் உயிரிழந்த ராணுவ வீரர் மதியழகன் மனைவிக்கு அரசு வேலை- முதல்வர் பழனிசாமி உத்தரவு.!

ஜம்மு யூனியன் பிரதேசம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர் மதியழகன் எதிரிகளின் தாக்குதலால் கடந்த 4 ஆம் தேதி வீர மரணமடைந்தார். அவரது குடும்பத்தாரை இன்று நேரில் சந்தித்த தமிழக முதல்வர், மதியழகன் மனைவிக்கு அரசு வேலை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில்:-

சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், வெத்தலைக்காரன் காடு கிராமத்தை சேர்ந்த திரு.பெ.மதியழகன் என்பவர், இந்திய ராணுவம் 17வது மெட்ராஸ் படைப்பிரிவில் அவில்தாராக பணிபுரிந்து ஜம்மு யூனியன் பிரதேசம், அக்னூர் செக்டர் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இந்திய திருநாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிரியின் போர் தாக்குதலால் கடந்த 4.6.2020 அன்று வீரமரணம் அடைந்தார்.வீரமரணமடைந்த திரு.ப.மதியழகன் அவர்களின் குடும்பத்தார்களான அவரது மனைவி திருமதி. தமிழரசி அவருடைய மகன் மா.ரோகித், மகள் ம.சுபஸ்ரீ, அவரது தந்தை திரு. பெத்தாகவுண்டர், தாயார் திருமதி. ராமாயி ஆகியோர் இன்று எடப்பாடி பயணியர் மாளிகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்து வீரமரணமடைந்த திரு. பெ.மதியழகன் மனைவிக்கு அரசு வேலை வழங்கிட வேண்டி கோரிக்கை மனு அளித்தார்கள்.


மனுவை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் அவர்கள், பாதுகாப்பு பணியில் வீர மரணம் அடைந்தவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியதோடு, இந்திய திருநாட்டினை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு தன் உயிரை தியாகம் செய்த திரு.பெ.மதியழகன் அவர்களின் மனைவி திருமதி. தமிழரசி என்பவருக்கு, அரசுப் பணி வழங்கிட உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உத்தரவிட்டுள்ளார்கள்.

முன்னதாக வீரமரணம் அடைந்த தமிழக வீரர் மதியழகன் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு இருந்தார்.

Leave your comments here...