மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்ட பிறகே, சமய வழிபாட்டு தலங்கள், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் – அறநிலையத்துறை

தமிழகம்

மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்ட பிறகே, சமய வழிபாட்டு தலங்கள், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் – அறநிலையத்துறை

மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்ட பிறகே, சமய வழிபாட்டு தலங்கள், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் –  அறநிலையத்துறை

ஊரடங்கால் மூடிக்கிடக்கும் கோவில்களை திறக்க வேண்டும் என்று இந்து அமைப்புகளும், பக்தர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். பக்தர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து கொண்டு இருக்கின்றனர்.ஊடரங்கு காரணமாக கோவில்களில், தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக பிரசித்தி பெற்ற கோவில்களின் சிறப்பு பூஜைகள், பிரதோஷ வழிபாடு ஆகியவை, ‘ஆன்-லைன்’ வாயிலாக, நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.தமிழகத்தில்,கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என, ஆன்மிக நல விரும்பிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை தலைமையகத்தில், கமிஷனர் தலைமையில், நேற்று காலை ஆலோசனைக் கூட்டம் நடந்ததாகவும், வரும், ஜூன், 1ல் இருந்து, கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்க முடிவு செய்ததாக, சமூக ஊடங்களில், செய்தி வெளியானது. இதை, அறநிலையத்துறை வட்டாரங்கள், திட்டவட்டமாக மறுத்துள்ளது.

‘மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்ட பிறகே, சமய வழிபாட்டு தலங்கள், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும். எனவே, புரளிகளை பக்தர்கள் நம்ப வேண்டாம்; தவறான தகவல் வெளியிடும் சமூக ஊடங்கங்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ எனவும் அறநிலையத்துறை அதிகாரிகள் கூறினர்.எது எப்படி இருந்தாலும், கோவில்கள் திறப்பது குறித்து தமிழக அரசின் உத்தரவை ஏற்று வருகிற 1-ந்தேதி பக்தர்கள் தரிசனத்திற்காக கோவில்கள் திறப்பதா? வேண்டாமா? என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

Leave your comments here...