எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் கொரோனாவுக்கு பலி..?

இந்தியா

எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் கொரோனாவுக்கு பலி..?

எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் கொரோனாவுக்கு பலி..?

உலகம் முழுவதிலும் மட்டுமின்றி, இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்தியாவில் இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால் 500-க்கும் அதிகமான டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய துணை ராணுவப்படையில் பெரிய பிரிவான சி.ஆர்.பி.எப்.பில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை பாதிப்புக்கு உள்ளாக்கிய கொரோனா, அந்த படையை சேர்ந்த 55 வயது அதிகாரியின் உயிரையும் பறித்துவிட்டது.எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) வீரர்களையும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது. இந்த படையில் ஏற்கனவே 150-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில், வைரஸ் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வந்த பி.எஸ்.எப். வீரர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் புதிதாக 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் எல்லை பாதுகாப்பு படையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 193 ஆக அதிகரித்து உள்ளது.

Leave your comments here...