தப்லிக் – இ – ஜமாத் தலைவர், மவுலானா சாத் இன்று குற்றவியல் பிரிவு போலீசார் முன் ஆஜராக வாய்ப்பு…?

இந்தியா

தப்லிக் – இ – ஜமாத் தலைவர், மவுலானா சாத் இன்று குற்றவியல் பிரிவு போலீசார் முன் ஆஜராக வாய்ப்பு…?

தப்லிக் – இ – ஜமாத் தலைவர், மவுலானா சாத் இன்று குற்றவியல் பிரிவு போலீசார் முன் ஆஜராக வாய்ப்பு…?

டெல்லி நிஜாமுதீன் தப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா முகமது சாத் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். ஏற்கனவே அவர் மீது டெல்லி காவல்துறை கொலை வழக்கை பதிவு செய்துள்ளார்கள். டெல்லி நிஜாமுதீன் மார்க்கஸில் நடத்திய மார்ச் மாத மாநாட்டில், பங்கேற்ற ஏராளமானோருக்கு கொரோனா வைரஸ் பாதித்த நிலையில் மவுலானா முகமது சாத் மீது கொலை வழக்கு பாய்ந்தது.இந்தியாவில் 35 சதவீத கொரோனா பாதிப்புக்கு தப்லீக் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்கள் தான் காரணம் என்று மத்திய அரசு அண்மையில் தெரிவித்தது. அத்துடன் அந்த மாநாட்டில் பங்கேற்ற 26,000 பேர் தனிமைப்படுத்திக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறியது.

இந்நிலையில் விசா விதிமுறைகளை மீறியதாக 1800 வெளிநாட்டு தப்லீக் ஜமாத் உறுப்பினர்களின் பாஸ்போர்ட்களை மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் முடக்கியது.தற்போது அமலாக்க இயக்குநரகம் அவர் மீது பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டி உள்ளது. மவுலானா சாத் மற்றும் ஜமாத் மற்றும் பிறருடன் தொடர்புடைய அறக்கட்டளைகளுக்கு எதிரான அமலாக்க வழக்கு தகவல் அறிக்கை (ஈ.சி.ஐ.ஆர்) டெல்லி போலீஸ் வழக்கின் அடிப்படையில் அமலாக்க துறையால் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

தப்லிக் – இ – ஜமாத் தலைவர், மவுலானா சாத் கந்தால்வி கடந்த, 31ம் தேதி, போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, மவுலானா சாத் கந்தால்விக்கு, போலீசார் இரண்டு முறை, ‘சம்மன்’ அனுப்பினர்.

கொரோனா அச்சுறுத்தலால், தனிமையில் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்த டில்லி குற்றவியல் பிரிவு போலீசார் உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், அவருக்கு கொரோனா இல்லை என முடிவு வந்துள்ளதாக மவுலானாவின் வக்கீல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மவுலானா நாளை குற்றவியல் பிரிவு போலீசார் இன்று ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave your comments here...