பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் :தொடர்ச்சியாக குமரி மாவட்ட கோவில்களில் திருடி வந்த உண்டியல் திருடன் கைது..!!

சமூக நலன்

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் :தொடர்ச்சியாக குமரி மாவட்ட கோவில்களில் திருடி வந்த உண்டியல் திருடன் கைது..!!

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் :தொடர்ச்சியாக குமரி மாவட்ட கோவில்களில் திருடி வந்த உண்டியல் திருடன் கைது..!!

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சம்பவம் அரங்கேறிய உள்ளது. மாா்த்தாண்டம் அருகே வாழைத்தோட்டம் பத்ரகாளி அம்மன் கோயில், மருதங்கோடு இசக்கியம்மன் கோயில், குளக்கச்சி பத்ரேஸ்வரி அம்மன் கோயில், கொடுங்குளம் மகாதேவா் கோயில் பாகோடு நாகராஜபுரம் சாஸ்தா கோயில் ஆகியவற்றில் அண்மையில் உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்த புகாா்களின் பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்தநிலையில் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் மற்றும் போலீசார் மார்த்தாண்டம் பகுதியில் ரோந்து சென்ற போது ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.



இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் அருமனை அருகே அண்டுகோடு பகுதியை சேர்ந்த ரகு (வயது 40) என்பதும், மார்த்தாண்டம் பகுதியில் உள்ள கோவில்களுக்குள் புகுந்து உண்டியல் பணம் திருடி வந்ததும் தெரிய வந்தது. அதே சமயத்தில் களுவன்திட்டையில் ஒரு பலசரக்கு கடையில் புகுந்து பணத்தையும் கொள்ளையடித்துள்ளார். மாா்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 7 கோயில்கள் மற்றும் கடையிலிருந்து பணத்தை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் ரகுவை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

Leave your comments here...