ஜனாதிபதி விருது பெற்ற போலீஸ் டி.எஸ்.பி. தீவிரவாதிகளுடன் தொடர்பு இருந்ததாக கைது..!

இந்தியா

ஜனாதிபதி விருது பெற்ற போலீஸ் டி.எஸ்.பி. தீவிரவாதிகளுடன் தொடர்பு இருந்ததாக கைது..!

ஜனாதிபதி விருது பெற்ற போலீஸ் டி.எஸ்.பி.  தீவிரவாதிகளுடன் தொடர்பு இருந்ததாக கைது..!

காஷ்மீரில் கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்குவது குறித்து ஒருவாரத்தில் பரிசீலிக்க வேண்டும் என மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 3  பயங்கரவாதிகள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். புல்வாமாவில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும்  நடந்த மோதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்க தளபதியும் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலம் எல்லை பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவ தயாராக இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து ராணுவம் மற்றும் போலீசாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில்,  குல்காம் மாவட்டம் மிர்பஜார் அருகே நெடுஞ்சாலையில் ராணுத்தினர் கடும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 3 பேர் இருந்தனர். அதில் ஒருவர் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பணியாற்றி வந்த போலீஸ் டி.எஸ்.பி. தேவிந்தர் சிங். அவர் துணிச்சலுக்கான ஜனாதிபதி பதக்கத்தை அணிந்திருந்தார்.
இது தொடர்பான விசாரணையில் அவருடன் இருந்தது பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்பதும் தெரியவந்தது.  அவர்களுடன் போலீஸ் அதிகாரிக்கு தொடர்பு இருந்துள்ளது. தீவிரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய தளபதியான சையத் நவீதுபாபு, ஹிஸ்புல் முஜாகிதின் அமைப்பை சேர்ந்த ஆசிப் ரத்தார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள் கை எறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.  2 தீவிரவாதிகளும் சோபியான் மாவட்டத்தில் இருந்து காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு வெளியே தப்பிச்செல்ல போலீஸ் டி.எஸ்.பி. தேவிந்தர் சிங் உதவி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட 3 பேரையும் தீவிர வீசாரணை நடத்த ரகசிய இடத்துக்கு ராணுவத்தினர் அழைத்து சென்றனர். மேலும் போலீஸ் டி.எஸ்.பி தேவிந்தர் சிங்கின் ஸ்ரீநகர் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஒரு ஏ.கே.47 துப்பாக்கி, 2 பிஸ்டல் துப்பாக்கிகள், 3 கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டன. மேலும் போலீஸ் டி.எஸ்.பி. தேவிந்தர் சிங் இன்று பணிக்கு வரவில்லை எனவும், நாளை முதல் 4 நாட்கள் விடுப்பு கேட்டு விண்ணப்பித்திருந்தார் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Leave your comments here...