தேர்தல் நேரத்தில் தான் மோடிக்கு பாசம்… தமிழக சுற்றுப்பயணத்தை வெற்று பயணமாக தான் மக்கள் பார்க்கிறார்கள் – தருமபுரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

இந்தியா

தேர்தல் நேரத்தில் தான் மோடிக்கு பாசம்… தமிழக சுற்றுப்பயணத்தை வெற்று பயணமாக தான் மக்கள் பார்க்கிறார்கள் – தருமபுரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

தேர்தல் நேரத்தில் தான் மோடிக்கு பாசம்…  தமிழக சுற்றுப்பயணத்தை வெற்று பயணமாக தான்  மக்கள் பார்க்கிறார்கள் – தருமபுரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 3 மாவட்டங்களில் ரூ.560 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தருமபுரி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, புதிய கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் ரூ.560 கோடி மதிப்பலான 75 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா தருமபுரி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு தருமபுரி மாவட்டத்தில் ரூ.151.89 கோடி மதிப்பிலான 879 முடிக்கப்பட்ட திட்டப்பணிகளையும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.34.10 கோடி மதிப்பில் 41 திட்டப்பணிகளும், சேலம் மாவட்டத்தில் ரூ.164.51 கோடி மதிப்பிலான கட்டிமுடிக்கப்பட்ட புதிய கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் குறித்து குறும்படம் திரையிடப்பட்டது. பின்னர் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில்  உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் ரூ.37.44 கோடி மதிப்பிலான 51 திட்டப்பணிகளையும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.65.56 கோடி மதிப்பிலான 17 திட்டப்பணிகளையும், சேலம் மாவட்டத்தில் ரூ.12.19 கோடி மதிப்பிலான 7 புதிய திட்டப்பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் 3,856 பயனாளிகளுக்கு ரூ.55.76 கோடி மதிப்பிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 2,206 பயனாளிகளுக்கு ரூ.21.63 கோடி மதிப்பிலும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 2,674 பயனாளிகளுக்கு ரூ.18.15 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 8736 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது: சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி 3 மாவட்டங்களுக்கான முத்தான விழா.  ஔவையாருக்கு நெல்லிக்கனி தந்த அதியமான் ஆட்சி செய்த பூமி தருமபுரி.  தமிழ் வளர வேண்டும் என்பதால் ஔவையாருக்கு நெல்லிக்கனி கொடுத்தவர் அதியமான்.  தருமபுரி என்றதும் நினைவுக்கு வருவது ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம். உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை அறிவித்தேன்.

பெண்களுக்கு சொத்துரிமை பெற்று தந்தவர் கருணாநிதி.  திராவிட மாடல் அரசு வகுத்த திட்டங்கள் குறித்து நாள் முழுவதும் பேசலாம்.  மக்களுக்கான திட்டங்களை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறோம்.* தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடிமகனும் பயன்பெறும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.  தருமபுரி ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை முடக்கியது அதிமுக.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்களை கொடுத்து வருகிறது. பேருந்து வசதி இல்லாத 8 மலை கிராமங்களுக்கு போக்குவரத்து செய்து கொடுத்துள்ளோம். 2ம் கட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில 920 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் நிறைவேற்றம்.  சேலம் மாவட்டத்தில் மினி டைடல் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டியுள்ளேன்.  தருமபுரி பாரதிபுரத்தில் 36 கோடி மதிப்பில் ரெயில்வே மேம்பாலம்.  தருமபுரி மாவட்டத்தில் 5 சமுதாக நலக்கூடம் அமைக்கப்படும்.  வாச்சாத்தி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. தேன்கனிக்கோட்டை பகுதியில் யானை தாக்குதலில் இருந்து பாதுகாக்க 10 கோடியில் எஃகு வேலி அமைக்கப்படும்.

சேலத்தில் 164 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு சாலை திட்டப் பணிகள் நிறைவேற்றப்படும்.  எப்போதும் மக்களுக்காகவே செயல்படும் திராவிட மாடல் அரசு. மத்திய பாஜக அரசு மாநிலங்களை சமமாக நடத்துவது இல்லை.  மாநில அரசின் நிதி ஆதாரத்தை மத்திய அரசு பறிக்கிறது. மாநில அரசின் ஆக்சிஜனான வரி வருவாயை நிறுத்த முயற்சிக்கிறது மத்திய அரசு.

மத்திய அரசுக்கு வருவாய் என்பது மாநில அரசு கொடுப்பது தான்.  பிரதமரின் சுற்றுப்பயணத்தை வெற்று பயணமாக தான் தமிழக மக்கள் பார்க்கிறார்கள்.  தேர்தல் நேரத்தில் மட்டும் மக்கள் மீது பிரதமருக்கு பாசம் வருகிறது.  சமையல் எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய் ஏற்றிவிட்டு தேர்தல் வருவதால் 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.  தேர்தல் காரணமாக மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி என நாடகமாடுகிறார்கள் என்று பேசினார்.

Leave your comments here...