முதல்முறை வாக்காளர்கள் அதிகளவில் ஓட்டுப்போட முன் வர வேண்டும் – முதல் முறை வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்..!

இந்தியா

முதல்முறை வாக்காளர்கள் அதிகளவில் ஓட்டுப்போட முன் வர வேண்டும் – முதல் முறை வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்..!

முதல்முறை வாக்காளர்கள் அதிகளவில் ஓட்டுப்போட முன் வர வேண்டும் – முதல் முறை வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்..!

18 வயது நிரம்பிய முதல் முறை வாக்காளர்கள் சாதனை படைக்கும் வகையில், அதிகளவில் ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும் ” என பிரதமர் நரேந்திர மோடி இன்று 110-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:மார்ச் 8-ம் தேதி பெண்கள் தினத்தைக் கொண்டாட உள்ளோம். நாட்டின் வளர்ச்சி பயணத்தில் பெண்களின் பங்களிப்புக்கு மரியாதை செய்ய இந்த நாள் சிறப்பான நாள். பெண்களுக்கு சம வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே, உலகம் வளர்ச்சி பெறும் என மகாகவி பாரதியார் கூறியுள்ளார்.

இந்தியாவில் பெண்கள் சக்தியானது அனைத்து துறைகளிலும் புதிய உச்சத்தை தொடுகிறது. கிராமங்களில் வசிக்கும் பெண்களால் டிரோன்களை இயக்க முடியுமா, பறக்கவைக்க வேண்டுமா என கேள்வி எழுந்தது. ஆனால் இன்று அதுவும் சாத்தியமானது. இயற்கை விவசாயம், நீர் சேகரிப்பு மற்றும் தூய்மைப்பணிகளில் பெண்களின் தலைமைப்பண்பு வெளிவந்துள்ளது.

ரசாயனங்களால், நமது அன்னை பூமியானது அவதிப்பட்டது. வேதனையடைந்தது. ஆனால், நமது பூமியை காப்பதில் பெண்கள் சக்தி முக்கிய பங்கு வகித்தது. நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் இயற்கை வேளாண்மையில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.தேர்தல் பணியில் இளைஞர்கள் எவ்வளவு அதிகமாக பங்கேற்கிறார்களோ, அந்த அளவுக்கு அதன் முடிவுகள் நாட்டுக்கு பயன் உள்ளதாக இருக்கும். வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் முதல் முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும். உற்சாகமும், ஆற்றலும் நிறைந்த இளைஞர்களால் இந்தியா பெருமிதம் கொள்கிறது.

18 வயது நிரம்பியவர்கள். 18-வது மக்களவைக்கு ஒரு உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை இளைஞர்கள் பெறுகிறார்கள். இதன் பொருள் 18-வது மக்களவை இளைஞர்களின் விருப்பத்தின் அடையாளமாகவும் இருக்கும் .இளைஞர்கள் அரசியல், பொது அறிவு குறித்த விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். விளையாட்டு, திரைப்படத்துறை, இலக்கியம் மற்றும் சமூக ஊடகங்கள் ஆகியவை முதல் முறை வாக்காளர்களை ஊக்குவிக்க வேண்டும்.

பாராளுமன்ற தேர்தலுக்கான சூழல் நாடு முழுவதும் பரவலாக உள்ளது. மார்ச் மாதத்தில் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளது.110 எபிசோட்களில் நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம், சாதனைகள் பற்றி மக்களுடன் பேசியது மன் கி பாத் நிகழ்ச்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

மன் கி பாத் என்பது மக்களால் மக்களுக்காக, மக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட ஒரு திட்டம். பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் சட்டத்தைப் பின்பற்றி அடுத்த 3 மாதங்களுக்கு மன் கி பாத் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படாது. அடுத்ததாக 111-வது எபிசோடில் மன் கி பாத்தில் மக்களுடன் உரையாடுவேன் என தெரிவித்தார்.

 

Leave your comments here...