நாளை மாலை வரை 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு – பிரதீப் ஜான்

தமிழகம்

நாளை மாலை வரை 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு – பிரதீப் ஜான்

நாளை மாலை வரை 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு – பிரதீப் ஜான்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று நள்ளிரவு முதல் நாளை மாலை வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தனியார் வானிலை ஆய்வு மைய நிபுணர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் (எக்ஸ்) பதிவில், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கடந்த இரு நாள்களாக மழை பெய்து வருகிறது. விருதுநகர் மாவட்டம் மாஞ்சோலை பகுதியில் அதிக மழை பெய்துள்ளது. டெல்டா உள்பட தென் மாவட்டங்களில் அடுத்த 2 – 3 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிக கனமழை பதிவாக வாய்ப்புள்ளது. சென்னையைப் போன்று செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய சுற்றுப்புற மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.வழக்கமாக ஜனவரி மாதத்தில் சராசரியாக 2 செ.மீ. மழை பதிவாகும். தற்போது 2 – 3 செ.மீ. மழை பெய்துள்ளது. ஆனால், இம்முறை 10 செ.மீ. மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave your comments here...