உலக முதலீட்டாளர்கள் மாநாடு – முதல் நாளிலேயே ரூ.5.5 லட்சம் கோடி எட்டப்பட்டு சாதனை..!

தமிழகம்

உலக முதலீட்டாளர்கள் மாநாடு – முதல் நாளிலேயே ரூ.5.5 லட்சம் கோடி எட்டப்பட்டு சாதனை..!

உலக முதலீட்டாளர்கள் மாநாடு – முதல் நாளிலேயே  ரூ.5.5 லட்சம் கோடி எட்டப்பட்டு சாதனை..!

இன்று தொடங்கிய உலக முதலீட்டாளர்கள் மாநாடு நாளை நிறைவு பெறுகிறது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாட்டில் தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்குவது, முதலீடு செய்தல், தொழில் செயல்பாடுகளை விரிவுபடுத்துதல் தொடர்பாக பல்வேறு நிறுவனங்களுடன் மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுன.

அந்த வகையில், பல்வேறு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கவும், முதலீடு செய்யவும், தொழிலை விரிவுபடுத்தவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தன.இந்த மாநாட்டில் தமிழ்நாடு அரசின் செமி கண்டெக்டர் மற்றும் மேம்பட்ட உற்பத்தி கொள்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இந்த நிலையில், சென்னையில் இன்று நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் முதல் நாளில் ரூ.5.5 லட்சம் கோடி இலக்கு எட்டப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. 100க்கு மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தகள் உலகின் பல்வேறு முன்னனி நிறுவனங்களால் கையெழுத்திடப்பட்டுள்ளன.

இன்று தொடங்கிய உலக முதலீட்டாளர்கள் மாநாடு நாளை நிறைவு பெறுகிறது. தமிழ்நாட்டில் புவிசார் குறியீடு பெற்ற 58 பொருட்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.

இம்மாநாட்டில் அதிகம் கவனம் ஈர்த்தது வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் ரூ.16000 கோடி முதலீட்டில் நிறுவனப்படவிருக்கும் மின்சார வாகனங்கள் உற்பத்தி மையம். இது தூத்துக்குடியில் நிறுவப்படவிருக்கிறது.

மேலும் முதல் பத்து முதலீடு நிறுவனங்கள் விவரம்

*குவால்காம் – சென்னை வடிவமைப்பு மையம் விரிவாக்கம் – ரூ.177.27 கோடி முதலீடு

*கோத்ரேஜ் நிறுவனம் – உற்பத்தி மையம் – ரூ.515 கோடி முதலீடு

*பெகாட்ரான் – நுகர்வோர் மின்னணு சாதனங்கள் உற்பத்தி மையம் – ரூ 1,000 கோடி முதலீடு

*டிவிஎஸ் நிறுவனம் – தமிழகம் முழுவதும் பல்வேறு திட்டங்கள் – ரூ.5,000 கோடி முதலீடு

*ஹூண்டாய் மோட்டார்ஸ் – மின்சார கார், மின்கலன்கல் உற்பத்தி நிறுவனம் – ரூ.6,180 கோடி முதலீடு – காஞ்சிபுரம்

*JSW Energy- புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் – ரூ 12,000 கோடி முதலீடு

*டாடா எலக்ட்ரானிக்ஸ் – செல்போன் உற்பத்தி மையம் – ரூ 12,082 கோடி முதலீடு – கிருஷ்ணகிரி

*வின்ஃபாஸ்ட் – மின்சார வாகனங்கள் உற்பத்தி மையம் – ரூ.16,000 கோடி முதலீடு

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல நிறுவனங்கள் கவனம் ஈர்க்கும் வகையிலான முதலீட்டை அறிவித்தன. அதில், அதிகம் கவனம் ஈர்த்தது வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் ரூ.16000 கோடி முதலீடு.

இந்நிறுவனம் தூத்துக்குடியில் மின்சார வாகனங்களின் உற்பத்தி மையத்தை தொடங்கவுள்ளது. இந்த நிறுவனங்களின் முதலீடுகள் மூலம் தமிழ்நாட்டில் அதிக அளவு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

Leave your comments here...