இனி வீசா இல்லாமல் மலேசியா சென்று வரலாம் இந்தியர்கள் – மலேசிய அரசு

இந்தியாஉலகம்

இனி வீசா இல்லாமல் மலேசியா சென்று வரலாம் இந்தியர்கள் – மலேசிய அரசு

இனி வீசா இல்லாமல் மலேசியா சென்று வரலாம் இந்தியர்கள் –  மலேசிய அரசு

தாய்லாந்து, இலங்கையைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து மலேசியா சென்று வர விசா தேவையில்லை எனவும் டிசம்பர் 1-ம்தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலேசியாவிற்குச் செல்லும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக புதிய நடைமுறை அறிமுகம் செய்வதாக அந்நாட்டின் பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று முடிவுக்கு வந்த பிறகு சுற்றுலாத் துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுத்து வருகின்றன. அதிலும் குறிப்பாகச் சுற்றுலாத் துறையை நம்பி இருந்த நாடுகள் மீண்டும் வெளிநாட்டுப் பயணிகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவில் இருந்து உலக நாடுகளுக்குச் சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்தியச் சுற்றுலாப் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சியாக இப்போது முக்கியமான ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக மேலும் அவர் குறிப்பிட்டதாவது,  சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு,  சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்தோர் இனி விசா இன்றி மலேசியாவுக்குள் நுழையலாம்.  இந்தியா, சீனாவைச் சேர்ந்தவர்கள் மலேசியாவில் விசா இன்றி 30 நாள்கள் வரை தங்கலாம்.

புதிய நடைமுறை அடுத்த மாதம் (டிச.1) ஒன்றாம் தேதி முதல் நடமுறைக்கு கொண்டுவரப்படும்.  விசா தேவயில்லை என்றாலும் பயணிகள் குற்றப்பின்னணி அல்லது வன்முறையில் ஈடுபட்டிருக்கின்றனரா என்பதை அறியப் பாதுகாப்புச் சோதனைகள் நடத்தப்படும்.  இந்தியாவை விட சீனாவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுப்பயணிகள் மலேசியாவிற்கு வர அதிக வாய்ப்புள்ளது எனக் குறிப்பிட்டார்.

Leave your comments here...