லாரியும் காரும் மோதிய விபத்தில் 5 பேர் பலி – குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி..!

தமிழகம்

லாரியும் காரும் மோதிய விபத்தில் 5 பேர் பலி – குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி..!

லாரியும் காரும் மோதிய விபத்தில் 5 பேர் பலி –  குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி..!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மருத்துவமனையில் ஒருவர் உயிரிழந்தார்.

விசாரணையில் கோவையில் இருந்து பழனி கோவில் சென்று திரும்பியதும், மனக்கடவு பகுதியில் விபத்து ஏற்பட்டதும் தெரிய வந்தது.காரும், லாரியும் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், மணக்கடவு கிராமம், ஆலங்காட்டுப்பிரிவு என்ற இடத்தில் இன்று (16.11.2023) மாலை டேங்கர் லாரியும், நான்கு சக்கர வானமும் நேருக்குநேர் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் நான்கு சக்கர வாகனத்தில் பயணம் செய்த தாராபுரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (65), அவரது மனைவி செல்வி (50), கோயம்புத்தூர் மாவட்டம், பெரிய நாயக்கன் பாளையம், வஞ்சியம்மா நகரைச் சேர்ந்த தமிழ்மணி (50), அவரது மனைவி சித்ரா (45) ஆகிய நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள்.

மேலும் திண்டுக்கல்லைச் சேர்ந்த கலாராணி (55) என்பவர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

 

Leave your comments here...