கனமழை எச்சரிக்கை எதிரொலி – 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை அவசர கடிதம்!

தமிழகம்

கனமழை எச்சரிக்கை எதிரொலி – 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை அவசர கடிதம்!

கனமழை எச்சரிக்கை எதிரொலி – 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை அவசர கடிதம்!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட பல மாவட்டங்களில் நேற்று மாலை முதல் விட்டு விட்டு கனமழை பெய்தது. இன்றும் மழை பெய்து வருகிறது.

தொடந்து மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் 27 மாவட்ட கலெக்டர்களுக்கு, வருவாய்த்துறை சார்பில் அவசர கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் அனுப்பி உள்ள அந்த கடிதத்தில், பேரிடர்களை கையாள்வதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை கடைபிடிக்க கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும், எந்த தேவையையும் சமாளிக்க போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாவட்ட கலெக்டர்களுக்கு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில், வருவாய்த்துறை இந்த கடிதத்தை எழுதியுள்ளது.

அதில் 27 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 27 மாவட்ட கலெக்டர்களுக்கு கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதில் விவரிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், எழுதியுள்ள அந்த கடிதத்தில் பேரிடர்களை கையாள்வதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகங்களைத் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும், எந்த தேவையையும் சமாளிக்க போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.மீட்பு படை வீரர்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். கனமழை முதல் மிக கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர்கள் முன்எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Leave your comments here...