எக்ஸ் கதிர்களை படமெடுத்து அனுப்பிய ஆதித்யா எல் 1 விண்கலம்..!

இந்தியா

எக்ஸ் கதிர்களை படமெடுத்து அனுப்பிய ஆதித்யா எல் 1 விண்கலம்..!

எக்ஸ் கதிர்களை படமெடுத்து அனுப்பிய ஆதித்யா எல் 1 விண்கலம்..!

சூரியனை ஆய்வு செய்ய கடந்த செப்டம்பர் 2ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா-எல்1 என்ற விண்கலத்தை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

இந்த விண்கலம் 125 நாட்கள் பயணம் செய்து பூமியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ‘லாக்ராஞ்சியன் புள்ளி-1ஐ சென்றடையும். அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்யும் பணியில் ஆதித்யா-எல்1 விண்கலம் ஈடுபட உள்ளது. பூமியின் ஈர்ப்பு மண்டலத்தில் இருந்து வெளியேறிய ஆதித்யா-எல்1 விண்கலம் தற்போது ‘லாக்ராஞ்சியன் புள்ளி-1ஐ நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், சூரியனை ஆய்வு செய்ய ‘லாக்ராஞ்சியன் புள்ளி-1ஐ நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் ஆதித்யா-எல்1 விண்கலம் சூரிய அனலில் இருந்து வெளியாகும் எக்ஸ் கதிர்களை முதல் முறையாக படமெடுத்து அனுப்பியுள்ளது.

சூரிய அனலில் இருந்து வெளியாகும் அதிதிறன் கொண்ட எக்ஸ் கதிர்களை முதல் முறையாக ஆதித்யா-எல்1 விண்கலம் படமெடுத்து அனுப்பியுள்ளது. கடந்த 29ம் தேதி பதிவான படத்தை கிராப் வடிவில் இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது.

ஆதித்யா-எல்1 விண்கலத்தில் உள்ள எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவி உயர் ஆற்றல் கொண்ட சூரிய கதிர்களை படமெடுத்து அனுப்பியுள்ளது. உயர் ஆற்றல் சூரிய கதிர்கள் குறித்து ஆதித்யா-எல்1 விண்கலத்தில் பொறுத்தப்பட்டுள்ள ஹெச்இஎல்10எஸ் கருவி நன்றாக ஆய்வு செய்துவருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஆதித்யா-எல்1 விண்கலம் அனுப்பிய தரவுகள் சூரிய ஆற்றல் மற்றும் எலக்ட்ரான் குறித்த ஆய்வு செய்ய உதவும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Leave your comments here...