பிக்பாஸ் விக்ரமன் மீது புகார் கூறிய பெண் – 13 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு..!

தமிழகம்

பிக்பாஸ் விக்ரமன் மீது புகார் கூறிய பெண் – 13 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு..!

பிக்பாஸ் விக்ரமன் மீது  புகார் கூறிய பெண் – 13 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு..!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகியும் பிக்பாஸ் பிரபலமுமான விக்ரமன் மீது வடபழனி காவல் நிலைய போலீஸார் 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை பெருங்குடியை சேர்ந்தவர் கிருபா முனுசாமி. இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்து வருகிறார். இவர் லண்டனில் ஆய்வுபட்டமும் பெற்றுள்ளார். இவர் கடந்த ஜூலை மாதம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பிக்பாஸ் பிரபலம் விக்ரமன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கிருபா முனுசாமி என்பவர் விக்ரமன் மீது கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த அந்த புகாரில், விக்ரமன் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாகவும், காதலிக்கும் போது தன்னிடம் இருந்து ரூ.13.7 லட்சம் பணம் வாங்கியதாகவும், அதில் 12 லட்சத்தை திருப்பி கொடுத்துவிட்டு 1.7 லட்சத்தை தரவில்லை என்றும் கூறி இருந்தார்.

அதுமட்டுமின்றி, இதுதொடர்பாக அவர் பதவி வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் புகார் அளித்தும் அதன் மீது ஆக்‌ஷன் எடுக்கப்படாததால், இதன்மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும்படி கிருபா அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் கிருபாவின் இந்த புகாரை விக்ரமன் திட்டவட்டமாக மறுத்ததோடு, இதை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் எனக் கூறி இருந்தார்.

இதையடுத்து தான் அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நீதிமன்றத்தை நாடினார் கிருபா. பின்னர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி விக்ரமன் மீது சென்னை வடபழனியில் உள்ள மகளிர் காவல்நிலையத்தில் பாலியல் வன்கொடுமை, மோசடி உள்பட 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து விக்ரமனிடம் தொடர்ந்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

Leave your comments here...