5 மாநில சட்டமன்ற தேர்தல் : தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்..!

இந்தியா

5 மாநில சட்டமன்ற தேர்தல் : தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்..!

5 மாநில சட்டமன்ற தேர்தல் : தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்..!

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டமன்றங்களின் பதவிக் காலம் விரைவில் முடிவு பெற உள்ளது. எனவே இந்த ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக ஐந்து மாநிலங்களுக்கும் நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தியதுடன், சம்பந்தப்பட்ட அரசு மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையும் மேற்கொண்டது.

இந்நிலையில் ஐந்து மாநில தேர்தல் தேதிகளையும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் இன்று அறிவித்தார்.

அதன்படி

  • சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
  • மிசோரத்தில் நவம்பர் 7-ம் தேதியும்,
  • மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17-ம் தேதியும்,
  • ராஜஸ்தானில் நவம்பர் 23-ம் தேதியும்,
  • தெலங்கானாவில் நவம்பர் 30-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும்

என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேற்கண்ட அனைத்து மாநிலங்களுக்குமான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகளும் வெளியாக உள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் முன்னோட்டமாக இந்த ஐந்து மாநிலத் தேர்தல்கள் கருதப்படுவதால் நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Leave your comments here...