போர் பிரகடன நிலையை அறிவித்தது இஸ்ரேல்… இந்தியர்கள் பாதுகாப்பாக இருங்கள் – மத்திய அரசு எச்சரிக்கை

இந்தியா

போர் பிரகடன நிலையை அறிவித்தது இஸ்ரேல்… இந்தியர்கள் பாதுகாப்பாக இருங்கள் – மத்திய அரசு எச்சரிக்கை

போர் பிரகடன நிலையை அறிவித்தது இஸ்ரேல்… இந்தியர்கள் பாதுகாப்பாக இருங்கள் – மத்திய அரசு எச்சரிக்கை

பாலஸ்தீன பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது இன்று மிக கொடூரமான தாக்குதல் நடத்தினர். மேலும் இஸ்ரேல் நாட்டின் பல்வேறு நகரங்களுக்குள் அத்துமீறி நுழைந்தனர். பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, போர் துவங்கிவிட்டது என்று இஸ்ரேல் பிரதமர் அதிரடியாக அறிவித்து இருக்கிறார். இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு:- இஸ்ரேல் குடிமக்களே, நாம் போரில் இருக்கிறோம். இது கூட்டு முயற்சியோ அல்லது எதிர்ப்பு நடவடிக்கையோ இல்லை. இது போர். ஹமாஸ் இதற்கான விலையை கொடுத்தே ஆக வேண்டும். எதிரிகள் இதுவரை சந்திக்காத பதிலடியை சந்திக்க உள்ளனர்,” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்து உள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்கள் இடையே பயங்கர மோதல் நடைபெற்று வருகிறது. இந்த மோதல்களில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு வங்கி பகுதிகளில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.காசாவில் ஆட்சி செய்து வரும் ஹமாஸ்-ஐ அமெரிக்கா பயங்கரவாத அமைப்பாக அறிவித்து இருக்கிறது. தாக்குதலுக்கு முன்பு ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதாக ஹமாஸ் அறிவித்து இருந்தது.

ஹமாஸ் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் அரசு காசாவில் தாக்குதல் நடத்த போர் விமானங்களை அனுப்பி வைத்துள்ளது.திடீர் தாக்குதல் மற்றும் போர் காரணமாக சிம்சாட் தோரா விடுமுறை தினத்திலும் சைரன் மற்றும் வெடிகுண்டு சத்தங்கள் அப்பகுதி முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தின. பொது மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து இருக்கிறது.வெடிகுண்டு தாக்குதல் ஒருபுறமும், மற்றொரு புறம் மோட்டார்சைக்கிள் மற்றும் பாராகிளைடர்கள் மூலம் இஸ்ரேலுக்குள் புகுந்த காசா பயங்கரவாதிகள் மற்றும் இஸ்ரேல் படையினர் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.

இது குறித்து, மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தனியாக இருப்பதை தவிர்த்து விட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வேண்டும். உள்ளூர் நிர்வாகம் வெளியிடும் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

அவசர தேவைக்கு இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். அங்கு வாழும் இந்தியர்கள் அவசர தே வைக்கு 97235256748 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். அல்லது consl. telaviv@mea.gov.inக்கு மெசேஜ் அனுப்பலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave your comments here...