திமுக எம்.பி வீட்டில் ஐடி ரெய்டு… விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தும் மத்திய அரசு – முதல்வர் ஸ்டாலின் காட்டம்!

தமிழகம்

திமுக எம்.பி வீட்டில் ஐடி ரெய்டு… விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தும் மத்திய அரசு – முதல்வர் ஸ்டாலின் காட்டம்!

திமுக எம்.பி வீட்டில் ஐடி ரெய்டு… விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தும் மத்திய அரசு – முதல்வர் ஸ்டாலின் காட்டம்!

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் வீட்டில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் வீட்டில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனை மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டது, தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்துவது அரசியல் நோக்கங்களுக்காக எதிர்க்கட்சியினர் மீது விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவது தெளிவாகத் தெரிகிறது.

விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்களை திட்டமிட்டு துன்புறுத்துவது ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும். மத்திய அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது.அமலாக்கத்துறை வெளிப்படையாகவும் நியாயமாகவும் செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் எச்சரித்ததை பாஜக வசதியாக மறந்துவிடுகிறது.பாஜக அரசு, சட்டத்தின் ஆட்சியையும் ஜனநாயகத்தையும் புறக்கணிக்கிறது.எதிர்க்கட்சிகளிடையே வளர்ந்து வரும் ஒற்றுமையை கண்டு பாஜக பயப்படுகிறதுஇவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Leave your comments here...