அதிநவீன ட்ரோன்கள் முலம் குண்டுகளை வீசும் ராணுவம் – தலைதெறிக்க ஓடும் பயங்கரவாதிகள்..!

இந்தியா

அதிநவீன ட்ரோன்கள் முலம் குண்டுகளை வீசும் ராணுவம் – தலைதெறிக்க ஓடும் பயங்கரவாதிகள்..!

அதிநவீன ட்ரோன்கள் முலம் குண்டுகளை வீசும் ராணுவம் – தலைதெறிக்க ஓடும் பயங்கரவாதிகள்..!

காஷ்மீரில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகள் மீது மோட்டார் குண்டுகளை ராணுவம் வீசுவதால், தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பியோடும் வீடியோ வைரலாகி உள்ளது.

ஜம்மு – காஷ்மீரின் தெற்கு காஷ்மீர் மாவட்டம் கோகர்நாக் அடுத்த கடோல் பகுதியில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில், இந்திய ராணுவத்தின் 19 ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவின் கமாண்டிங் அதிகாரி கர்னல் மன்பிரீத் சிங், ஜம்மு காஷ்மீர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மேஜர் ஆஷிஷ் தோச்சக் உள்ளிட்ட 4 பேர் அடுத்தடுத்து வீரமரணம் அடைந்தனர்.

தீவிரவாதிகளின் செயல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அனந்த்நாக்கில் பதுங்கியிருக்கும் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளை தேடும் பணியில், தொடர்ந்து 4வது நாளாக பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். மலைப்பாங்கான காடுகளில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை கண்டுபிடிக்க ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தீவிரவாதிகள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடுவது போன்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. ராணுவத்தின் அதிரடி நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட தீவிரவாதிகள், தற்போது அவர்களது உயிரை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

முன்னதாக, அந்தப் பகுதியில் வசித்து வந்த பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. கடோல் கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுமையாக பாதுகாப்புப் படை வசம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்கேற்ப சனிக்கிழமை கூடுதல் படைகள் அங்கு குவிக்கப்பட்டுள்ளன.

அந்த வீடியோவில் அவர்கள் அங்கும் இங்கும் ஓடுவதை பார்க்க முடிகிறது. இதுகுறித்து பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகையில், ‘ஆளில்லா விமானத்தின் மூலம் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடம் மீது பாதுகாப்புப் படையினர் மோட்டார் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இது தவிர அப்பகுதியை பாதுகாப்பு படையினர் முழுமையாக சுற்றி வளைத்துள்ளனர். விரைவில் தீவிரவாதிகளுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும்’ என்று கூறினர் .

இதனிடையே, வட காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் ஹத்லங்கா என்ற இடத்தில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இவர்களில் இருவரின் உடல்களை இந்திய ராணுவம் கைப்பற்றிய நிலையில், மூன்றாவது பயங்கரவாதியின் உடலை பாகிஸ்தான் ராணுவம் தங்கள் பக்கம் கொண்டு சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்துக்கு எதிராக துப்பாக்கிச்சூடு நடத்திக் கொண்டே அந்த பயங்கரவாதியின் உடலை, பாகிஸ்தான் ராணுவம் தங்கள் பக்கம் கொண்டு சென்றதாகவும், இதன்மூலம் அந்த நாடு போர் நிறுத்த ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறி இருப்பதாகவும் இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave your comments here...