பள்ளி மாணவனிடம் பாலியல் தொல்லை.. போக்சோ வழக்கில் தலைமறைவான ஆசிரியர் 2 மாதங்களுக்கு பிறகு கைது..!

தமிழகம்

பள்ளி மாணவனிடம் பாலியல் தொல்லை.. போக்சோ வழக்கில் தலைமறைவான ஆசிரியர் 2 மாதங்களுக்கு பிறகு கைது..!

பள்ளி மாணவனிடம் பாலியல் தொல்லை.. போக்சோ வழக்கில் தலைமறைவான ஆசிரியர் 2 மாதங்களுக்கு பிறகு கைது..!

கன்னியாகுமரி : இரணியலில் அரசு பள்ளி மாணவனிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டு தலைமறைவான அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

குமரி மாவட்டம் இரணியல் அருகே ஆலங்கோடு பகுதியை சேர்ந்த 13 வயதான மாணவர் ஒருவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவனை இயற்பியல் ஆசிரியர் அருள் ஜீவன் ஆய்வகத்திற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த மாணவன் நடந்த சம்பவத்தை தந்தையிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து மாணவனை தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். இது தொடர்பாக குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சங்கீதா அன்பு ஜூலியட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவனிடமும், அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்றும் விசாரணை நடத்தினார்.

விசாரணையில் ஆசிரியர் அருள்ஜீவன் மாணவனிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டது உறுதியானது. பின்னர் இயற்பியல் ஆசிரியர் அருள்ஜீவன் மீது போக்சோ பிரிவு உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அறிந்த ஆசிரியர் அருள்ஜீவன் தலைமறைவானார். அவரை போலீசார் தேடிவந்தனர்.

இதற்கிடையே மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் ஆசிரியர் அருள் ஜீவனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்தநிலையில் கருங்கலில் தலைமறைவாக இருந்த ஆசிரியர் அருள்ஜீவனை 2 மாதங்களுக்கு பிறகு குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave your comments here...