10ம் வகுப்பு மாணவியை மிரட்டி பலாத்காரம் – பிரபல ஜோதிடரை கைது செய்த போலீசார்.!

இந்தியா

10ம் வகுப்பு மாணவியை மிரட்டி பலாத்காரம் – பிரபல ஜோதிடரை கைது செய்த போலீசார்.!

10ம் வகுப்பு மாணவியை மிரட்டி  பலாத்காரம் – பிரபல ஜோதிடரை கைது செய்த போலீசார்.!

கேரளாவில் 10ம் வகுப்பு மாணவியை மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்த பிரபல ஜோதிடரை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள வைக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுதர்சனன் (56). பிரபல ஜோதிடரான இவர் அப்பகுதியில் ஒரு ஜோதிட நிலையமும், ஒரு கடையும் நடத்தி வந்தார். அதே பகுதியிலுள்ள ஒருவர் நீண்ட காலமாக நோய் வாய்ப்பட்டிருந்தார். இவருக்கு 15 வயதில் ஒரு மகள் உண்டு. இவர் அப்பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி மீது ஆசைப்பட்ட ஜோதிடர் சுதர்சனன், அவரது தந்தைக்கு பண உதவி செய்து வந்து அந்தக் குடும்பத்துடன் நெருக்கத்தை ஏற்படுத்தி கொண்டார். பணம் தேவைப்படும்போது மாணவியை தன்னுடைய கடைக்கு அனுப்பி வாங்கிக் கொள்ளுமாறு குடும்பத்தினரிடம் அவர் கூறியுள்ளார்.

அதை நம்பி கடந்த சில மாதங்களுக்கு முன் பணம் வாங்குவதற்காக அந்த மாணவி சுதர்சனின் கடைக்கு சென்றுள்ளார். அப்போது ஜூசில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவியை சுதர்சனன் கடைக்குள் வைத்து பலாத்காரம் செய்துள்ளார். மேலும் பலாத்காரம் செய்ததை ஆபாச படமாகவும் எடுத்து வைத்ததாக கூறப்படுகிறது. மயக்கம் தெளிந்த பின்னர் தனக்கு நேர்ந்த கொடூரத்தை நினைத்து மாணவி கதறி அழுதார்.

அப்போது இதை வெளியே யாரிடமாவது சொன்னால் உன் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொலை செய்து விடுவேன் என்றும், உனது ஆபாச படங்கள் என்னிடம் இருப்பதால் நான் அழைக்கும்போதெல்லாம் என்னிடம் வந்து உல்லாசமாக இருக்க வேண்டுமென்று மாணவியை, சுதர்சனன் மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்துபோன மாணவி பலமுறை சுதர்சனனின் இச்சைக்கு இரையானார். நாளுக்கு நாள் சுதர்சனனின் துன்புறுத்தல் அதிகரித்ததை தொடர்ந்து அந்த மாணவி இச்சம்பவம் குறித்து தன்னுடைய தோழிகளிடம் கூறினார். இது குறித்து சக மாணவிகள் பள்ளி ஆசிரியையிடம் கூறினர். அதிர்ச்சியடைந்த ஆசிரியை வைக்கம் போலீசில் புகார் கொடுத்தார்.

இதன்பேரில் போலீசார் ஜோதிடர் சுதர்சனன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இது குறித்து அறிந்த சுதர்சனன் தலைமறைவானார். அவரை பல்வேறு இடங்களில் போலீசார் தேடிவந்தனர்.

இந்நிலையில் கோட்டயம் அருகே உள்ள குரவிலங்காடு பகுதியில் சுதர்சனன் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர். விசாரணைக்குப் பின் அவரை போலீசார் கோட்டயம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave your comments here...