பயங்கரவாத அமைப்புகளின் பெயர்களிலும் “இந்தியா” பெயர் உள்ளது – பிரதமர் மோடி சரமாரி தாக்கு..!

அரசியல்இந்தியா

பயங்கரவாத அமைப்புகளின் பெயர்களிலும் “இந்தியா” பெயர் உள்ளது – பிரதமர் மோடி சரமாரி தாக்கு..!

பயங்கரவாத அமைப்புகளின் பெயர்களிலும்  “இந்தியா” பெயர் உள்ளது – பிரதமர் மோடி சரமாரி தாக்கு..!

இந்தியன் முஜாகிதீன், பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் பெயர்களிலும் ‛ இந்தியா’ என்ற பெயர் இருப்பதாக, எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள ‛ இந்தியா’ கூட்டணி குறித்து பிரதமர் மோடி கடுமையாக சாடி உள்ளார்.

இந்தியா என்ற பெயரை வைப்பதால் ஆட்சிக்கு வந்துவிட முடியாது எனவும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.பார்லிமென்ட் 4 நாட்களாக, மணிப்பூர் விவகாரத்தால் முடங்கி வரும் நிலையில், பாஜக பார்லிமென்ட் குழுக்கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாக, ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது:இந்திய தேசிய காங்கிரஸ், நாட்டை அடிமைப்படுத்திய கிழக்கு இந்திய கம்பெனி, பயங்கரவாத அமைப்புகளான இந்தியன் முஜாகிதீன், பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்புகளிலும் இந்தியா பெயர் உள்ளது. பெயரில் இந்தியா என்ற வார்த்தையை கொண்டு வருவதால் எதுவும் நடந்துவிடாது.

தோல்வியடைந்த, நம்பிக்கையற்ற, திசையற்ற, ஓய்ந்து போன, மோடி எதிர்ப்பு என்ற ஒற்றை திட்டத்தை மட்டும் கொண்டுள்ள கூட்டணியாக எதிர்க்கட்சிகளின் கூட்டணி உள்ளது. இதை போன்ற கூட்டணியை முன்னர் நான் பார்த்தது கிடையாது. இந்த கட்சிகள் விவாதத்தில் இருந்து நழுவுகின்றன.

‛கிழக்கு இந்தியா’ கம்பெனி போல் மக்களிடம் கொள்ளையடிக்க விரும்புகின்றன. இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்து மக்களை தவறாக வழிநடத்த முயற்சி செய்கின்றன. நாட்டின் பெயரை வைப்பதால் மட்டும் ஆட்சிக்கு வந்துவிட முடியாது. இவ்வாறு மோடி பேசியுள்ளார்.

Leave your comments here...