2வது கட்டத்திற்கு வெற்றிகரமாக சந்திரயான் 3 உயர்த்தப்பட்டது – இஸ்ரோ தகவல்

இந்தியா

2வது கட்டத்திற்கு வெற்றிகரமாக சந்திரயான் 3 உயர்த்தப்பட்டது – இஸ்ரோ தகவல்

2வது கட்டத்திற்கு வெற்றிகரமாக சந்திரயான் 3 உயர்த்தப்பட்டது – இஸ்ரோ தகவல்

நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த வெள்ளி கிழமை அன்று விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக 2-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக கடந்த வெள்ளி கிழமை அன்று ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சந்திரயான் 3 விண்கலம் ஏவப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட 179 கிலோ மீட்டர் தூரத்தை ராக்கெட் அடைந்ததும் சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக இலக்கில் கொண்டு சேர்த்தது.

இதையடுத்து முதல் சுற்றுப்பாதையை உயர்த்தும் முயற்சி நேற்று வெற்றி அடைந்த நிலையில் 2-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் முயற்சி வெற்றி பெற்று இருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

அதன்படி சந்திரயான் 3 விண்கலம் புவியில் இருந்து 41,603கி.மீ., 226 கி.மீ., சுற்றுப்பாதையில் உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நாளை பிற்பகல் 2 மணி முதல் 3 மணிக்குள்ளாக 3-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் முயற்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...