22 மாநிலங்களுக்கு ரூ.7,532 கோடி பேரிடர் நிவாரண நிதி – தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி ஒதுக்கீடு..!

இந்தியா

22 மாநிலங்களுக்கு ரூ.7,532 கோடி பேரிடர் நிவாரண நிதி – தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி ஒதுக்கீடு..!

22 மாநிலங்களுக்கு ரூ.7,532 கோடி பேரிடர் நிவாரண நிதி – தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி ஒதுக்கீடு..!

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 280-ன் கீழ் நிதி ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று மாநில பேரிடர் நிவாரண நிதி வழங்கப்படுகிறது. மழை, வெள்ளம் உள்ளிட்ட வகையான 12 பேரிடர்களின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கான செலவினங்களை எதிர்கொள்வதற்காக இந்த நிதி உதவி அளிக்கப்படுகிறது. சமீபத்தில் பேரிடர் காலங்களில் மக்களுக்கு நிவாரணங்கள் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 பிரிவு 48 (1)(a)ன் கீழ் ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில பேரிடர் மீட்பு படை அமைக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட பேரிடர்களுக்காக மாநில அரசுகளிடம் உள்ள முதன்மை நிதியாக இந்த நிதி உள்ளது. மத்திய அரசு பொது மாநிலங்களில் 75 சதவீதமும், வடகிழக்கு மற்றும் இமயமலை மாநிலங்களில் 90 சதவீதமும் மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்குகிறது.

நிதி ஆயோக்கின் பரிந்துரையின் அடிப்படையில் ஆண்டு மத்திய பங்களிப்பு இரண்டு தவணைகளில் வெளியிடப்படுகிறது.முந்தைய தவணையில் வெளியிடப்பட்ட தொகையின் பயன்பாட்டுச் சான்றிதழைப் பெற்று, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாநில அரசாங்கத்திடமிருந்து அறிக்கையைப் பெற்றதன் மூலம் நிதி விடுவிக்கப்படும். ஆனால் இந்த முறை வட மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் அவசியம் கருதி பயன்பாட்டுச் சான்றிதழ்களை பெறுவதற்கு முன்னதாக நிவாரண நிதி விடுவிக்கபட்டுள்ளது.

இந்நிலையில், இன்று 22 மாநில அரசுகளுக்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ.7,532 கோடியை வழங்கியுள்ளது மத்திய அரசு. தமிழ்நாட்டிற்கு ₹450 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

22 மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ள நிதியில் அதிகபட்சமாக மராட்டியத்திற்கு ரூ.1,420.80 கோடியும், உத்தரப்பிரதேசத்துக்கு ரூ.712 கோடியும், ஒடிசா மாநிலத்திற்கு ரூ. 707.60 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்திற்கு ரூ.450 கோடி,
* ஆந்திராவுக்கு ரூ.493.60 கோடி,
* அருணாச்சல பிரதேசத்துக்கு ரூ.110.40 கோடி,
* அசாமுக்கு ரூ.340.40 கோடி,
* பீஹாருக்கு ரூ.624.40 கோடி

* சத்தீஸ்கருக்கு ரூ.181.60 கோடி,
* கோவாவுக்கு 4.80 கோடி,
* குஜராத்துக்கு ரூ.580 கோடி,
* அரியானாவுக்கு ரூ.216.80 கோடி,
* இமாச்சல் பிரதேசத்துக்கு ரூ.180.40 கோடி,
* கர்நாடகாவுக்கு ரூ.348.80 கோடிய,
* கேரளாவுக்கு ரூ.138.80 கோடிய,
* மஹாராஷ்டிராவுக்கு ரூ.1420.80 கோடி,
* மணிப்பூருக்கு ரூ.18.80 கோடி,
* மேகாலயாவுக்கு ரூ.27.20 கோடி,
* மிசோரம் மாநிலத்திற்கு ரூ.20.80 கோடி,
* ஒடிசா மாநிலத்திற்கு ரூ.707.60 கோடி,
* பஞ்சாப்க்கு ரூ. 218.40 கோடி,
* தெலுங்கானாவுக்கு ரூ.188.80 கோடி,
* திரிபுராவுக்கு ரூ.30.40 கோடி,
* உத்தரபிரதேசத்துக்கு ரூ.812 கோடி,
* உத்தரகண்டுக்கு ரூ.413.20 கோடியும் மத்திய அரசு வழங்கியுள்ளது.

இந்த நிதி பேரிடர்காலத்தில் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க பெரிதும் உதவும். அதேபோல் பேரிடர் காலத்தை எதிர்கொள்ள உதவிக்கரமாக இருக்கும் என கூறப்படுகிறது.

Leave your comments here...