மதுபான கலப்படங்களைத் தவிர்க்கவே டெட்ரா பேக் முறை – அமைச்சர் முத்துசாமி தகவல்..!

தமிழகம்

மதுபான கலப்படங்களைத் தவிர்க்கவே டெட்ரா பேக் முறை – அமைச்சர் முத்துசாமி தகவல்..!

மதுபான கலப்படங்களைத் தவிர்க்கவே டெட்ரா பேக் முறை – அமைச்சர் முத்துசாமி தகவல்..!

கலப்பட மதுபானங்களை தவிர்க்கவே டெட்ரா பேக் முறையை நடைமுறைப்படுத்த உள்ளதாக மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் 483 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் குடிநீர் விநியோகம் செய்வதற்கான பணிகளை தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- டாஸ்மாக் கடைகளில் உள்ள பிரச்சனைகள் குறித்து அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மது பாட்டில்கள் வேண்டாம் என முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. மிக எளிதாக கலப்படம், மறு பயன்பாட்டின் போது சுத்தம் செய்வதில் குறைபாடு, சாலையோரம் மற்றும் விளை நிலத்தில் வீசி செல்வதால் விவசாயிகள் பாதிப்பு, எடுத்து செல்லும் போது பாட்டில்கள் உடைந்து விடுவது போன்ற பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன.

இவற்றை தீர்க்க புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களை போல தமிழ்நாட்டிலும் டெட்ரா பேக் முறையை அமல்படுத்த உள்ளோம். இதன் மூலம் 99 சதவீதம் சேதாரம் இருக்காது. 2 ஆண்டுகளுக்கு உத்தரவாதம் தரப்படுகிறது. இது குறித்து அன்புமணி ராமதாஸ் கூறிய கருத்து மறுக்கப்படவில்லை. அது குறித்து பரிசீலிக்கப்படும். தனியாக குழு ஆய்வு செய்து வருகிறது. அந்த குழு எடுக்கும் முடிவின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave your comments here...