ஏழை எளிய மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை பறிப்பதிலேயே குறியாக இருக்கிறது திமுக – அண்ணாமலை குற்றம்சாட்டு

தமிழகம்

ஏழை எளிய மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை பறிப்பதிலேயே குறியாக இருக்கிறது திமுக – அண்ணாமலை குற்றம்சாட்டு

ஏழை எளிய மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை பறிப்பதிலேயே குறியாக இருக்கிறது திமுக – அண்ணாமலை குற்றம்சாட்டு

திமுக ஆட்சிக்கு வந்தது முதல், ஏழை எளிய மாணவர்களின் கல்வி வாய்ப்புகளைப் பறிப்பதையே தொடர்ந்து செய்து வருகிறது எனக் குற்றம்சாட்டியுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:- தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஏழை-எளிய மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை பறிப்பதையே தொடர்ந்து செய்து வருகிறது.

ஏழை-எளிய மாணவர்களுக்கான ஒவ்வொரு வாய்ப்புகளையும், தங்கள் மெத்தன போக்கினால் கோட்டைவிட்ட தமிழக அரசு, இதன் உச்சகட்டமாக, மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி உரிமை திட்டத்தின் வாயிலாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்காக தனியார் பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் கல்வி கட்டணத்தை குறைத்திருக்கிறது தி.மு.க. அரசு. 2021 ஏப்ரல் மாதம் முதல் 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில், மத்திய அரசு தமிழக அரசுக்கு ரூ.3,767.55 கோடி வழங்கியுள்ள நிலையில், ஏழை-எளிய மாணவர்களின் கல்விக்காக வழங்கப்படும் நிதியை பெருமளவில் குறைத்திருக்கிறது தமிழக அரசு.

இதனால், மீத கட்டணத்தை, பெற்றோர்களிடமிருந்து வசூலிக்க, பள்ளிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரிகிறது. தி.மு.க.வின் இத்தகைய ஏழை-எளிய மக்கள் விரோத நடவடிக்கைகள், அனைவருக்கும் கல்வி உரிமை திட்டம் என்ற நோக்கத்தையே சிதைப்பதாக உள்ளது.

2 ஆண்டுகளாக மழலையர் வகுப்புகளுக்காக பள்ளிகளுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகையை வழங்காமல், தொடர்ந்து, கல்விக்கு ஒதுக்கப்படும் நிதியை குறைப்பது, காலதாமதமாக வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளால், ஏழை-எளிய மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை பறிப்பதிலேயே தமிழக அரசு குறியாக இருக்கிறது.

இத்தகைய நடவடிக்கைகள், தி.மு.க.வினர் நடத்தும் தனியார் கல்வி நிறுவனங்கள் பயனடைவதற்காக, ஏழை-எளிய மாணவர்களுக்கான கல்வி மற்றும் இதர வாய்ப்புகளை சிதைக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபடுகிறதோ என்ற கேள்வி பொதுமக்கள் மனதில் எழுந்திருக்கிறது.

உடனடியாக, ஏழை-எளிய மாணவர்களின் கல்வி வாய்ப்புகள் பாதிக்கும்படியான அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை குறைத்து வெளியிட்டுள்ள அரசாணையை திரும்பப்பெற்று, ஏழை-எளிய மாணவர்கள் தரமான கல்வி பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave your comments here...