நிவாரணத் தொகை… ஒடிசா ரயில் விபத்தில் கணவன் இறந்ததாக போலி சான்றிதழ் – நாடகமாடிய மனைவி மீது நடவடிக்கை எடுக்க கணவன் கோரிக்கை

இந்தியா

நிவாரணத் தொகை… ஒடிசா ரயில் விபத்தில் கணவன் இறந்ததாக போலி சான்றிதழ் – நாடகமாடிய மனைவி மீது நடவடிக்கை எடுக்க கணவன் கோரிக்கை

நிவாரணத் தொகை… ஒடிசா ரயில் விபத்தில் கணவன் இறந்ததாக போலி சான்றிதழ் – நாடகமாடிய மனைவி மீது நடவடிக்கை எடுக்க கணவன் கோரிக்கை

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரயில் நிலையம் அருகே ஜூன் 2-ந்தேதி இரவு 7 மணியளவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் வந்துகொண்டிருந்தது. அப்போது, ஒதுக்கப்பட்ட தண்டவாளத்தில் இருந்து தடம் மாறி சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான வேகத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் தடம்புரண்டு அருகில் உள்ள தண்டவாளத்தில் விழுந்தன.

அப்போது அந்த தண்டவாளத்தில் அதிவேகமாக வந்த பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் கோரமண்டல் ரயில் பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். மேலும், ஆயிரத்து 100 பேர் படுகாயமடைந்தனர். 3 ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்தார். மேலும் பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும், ரெயில்வே சார்பில் ரூ.10 லட்சமும் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தனது கணவர் ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்ததாக கூறி நிவாரணத் தொகையை பெறுவதற்காக நாடகமாடிய பெண் சிக்கலில் மாட்டியுள்ளார். கட்டாக் மாவட்டத்தில் உள்ள மணிபண்டாவைச் சேர்ந்தவர் கீதாஞ்சலி தத்தா. அவரது கணவர் பிஜய் தத்தா. இருவரும் கடந்த 13 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கீதாஞ்சலி தனது கணவர் பிஜய் தத்தா ரயில் விபத்தில் இறந்துவிட்டதாகவும், ஒரு உடலை தனது கணவருடையது என்றும் கூறியுள்ளார்.

ஆனால், ஆவணங்களைச் சரிபார்த்ததில், அவர் பொய் சொன்னது தெரியவந்தது. இதையடுத்து அவரை எச்சரித்து போலீசார் விடுவித்தனர்.இந்த நிலையில் தான் மரணித்து விட்டதாக பொய் சொல்லி, பொதுப் பணத்தை அபகரிக்க முயன்ற கீதாஞ்சலி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது கணவர் பிஜய் தத்தா கீதாஞ்சலி மீது புகாரளித்துள்ளார். கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் கீதாஞ்சலி தற்போது தலைமறைவாகி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave your comments here...