ரூ.230 கோடியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு மருத்துவமனை – ஜனாதிபதி திரவுபதி முர்மு ஜூன் 5ல் தமிழகம் வருகிறார்..!

இந்தியாதமிழகம்

ரூ.230 கோடியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு மருத்துவமனை – ஜனாதிபதி திரவுபதி முர்மு ஜூன் 5ல் தமிழகம் வருகிறார்..!

ரூ.230 கோடியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு மருத்துவமனை – ஜனாதிபதி திரவுபதி முர்மு ஜூன் 5ல் தமிழகம் வருகிறார்..!

டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை தமிழக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது கிண்டியில் அமையவுள்ள ‘கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை’ திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுத்தார். இந்த நிலையில், முதல்-அமைச்சரின் அழைப்பை ஏற்றுக்கொண்டு ஜூன் 5-ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு தமிழகம் வருகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வரும் ஜனாதிபதி ஜூன் 5-ந் தேதி கிண்டியில் உள்ள பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.28) ஜனாதிபதி திரவுபதி முர்முவை டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து, சென்னை – கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறந்து வைத்திட அழைப்பு விடுத்தார்.

முன்னதாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதல்-அமைச்சர், “சென்னை பெருநகரத்தில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும்” என கடந்த 2021ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி அறிவித்தார்.

சென்னை, கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 1,000 படுக்கைகளுடன் கூடிய, சுமார் 51,429 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் ரூ.230 கோடி செலவில் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையிலும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழாவினை ஒட்டியும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜனாதிபதி திரவுபதி முர்முவை இந்த விழாக்களில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார்.

முதல்-அமைச்சரின் அழைப்பினை ஏற்று ஜனாதிபதி திரவுபதி முர்மு ஜூன் மாதம் 5-ம் தேதி சென்னை, கிண்டியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு விழா மற்றும் நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ள கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா ஆகியவற்றில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார்.

Leave your comments here...