தேவாலயத்திற்கு வரும் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் – பாதிரியார் ஸ்டான்லி குமார் கைது

தமிழகம்

தேவாலயத்திற்கு வரும் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் – பாதிரியார் ஸ்டான்லி குமார் கைது

தேவாலயத்திற்கு வரும் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் – பாதிரியார் ஸ்டான்லி குமார் கைது

குமரிமாவட்டத்தை பூர்விகமாகக் கொண்ட போதகர் தேவாலயத்திற்கு வருவோரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தென்காசி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம், வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் அவர் கைதும் செய்யப்பட்ட நிலையில் குமரிமாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட இன்னொரு போதகர் தேவாலயத்திற்கு வருவோரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தென்காசி போலீஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், தடிக்காரன்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டான்லி குமார்(49). இவர் தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியில் உள்ள தேவாலயத்தில் போதகராக உள்ளார். இவர் மீது ஆலங்குளத்தை சேர்ந்த பெண் ஒருவர் போலீஸில் புகார் கொடுத்தார்.

அதில், ‘என் மகளுக்கு 30 வயது. அவளுக்கு தீராத வயிற்றுவலி. அதற்காக பிரார்த்தனை செய்ய சர்ச்க்கு அழைத்துச் சென்றேன். அங்கு என் மகளுக்கு போதகர் ஸ்டான்லி குமார் பாலியல் தொல்லை கொடுத்தார். இதை வெளியில் சொன்னால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டினார். இதேபோல் சர்ச்க்கு வரும் இன்னொரு பெண் குளிப்பதை படம் எடுத்துவைத்துக் கொண்டு அவரையும் மிரட்டியுள்ளார். பாலியல் துன்புறுத்தல் செய்ய ஃபோட்டோவைக் காட்டி மிரட்டினார். இதுதொடர்பான புகாரும் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் உள்ளது.

இதேபோல் சர்ச்சுக்குள் சுழலும் கேமிராவைத்து அதன் மூலம் பெண்களைப் படம் எடுத்து மார்பிங் மூலம் ஆபாசமாக சித்தரித்து தகாத உறவுக்கு அழைத்து மிரட்டுகிறார் ”எனக் கூறியுள்ளார். இதுகுறித்து ஆலங்குளம் போலீஸார் நடத்திய விசாரணையில் போதகர் ஸ்டான்லி குமார் அப்படிச் செய்து இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீஸார் போதகர் ஸ்டான்லி குமாரைக் கைது செய்தனர். பாலியல் வழக்குகளில் தொடர்ந்து குமரி பாதிரியார்கள் கைது செய்யப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave your comments here...