வந்தே பாரத் ரயில் நவீன இந்தியாவின் அடையாளம் – பிரதமர் மோடி ..!

இந்தியா

வந்தே பாரத் ரயில் நவீன இந்தியாவின் அடையாளம் – பிரதமர் மோடி ..!

வந்தே பாரத் ரயில் நவீன இந்தியாவின் அடையாளம் – பிரதமர் மோடி ..!

மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் முனையத்தில் வந்தே பாரத் ரயில் சேவைகளை கொடியசைத்து பிரதமர் தொடங்கி வைத்தார்.வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த பள்ளிக் குழந்தைகளுடன் கலந்துரையாடி பிரதமர் மோடி மகிழ்ந்தார்.இந்நிகழ்ச்சியில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மும்பை – சோலாப்பூர் வந்தே பாரத் ரயில், நாட்டின் 9-வது வந்தே பாரத் ரயிலாகும். புதிய உலகத்தரம் வாய்ந்த ரயில், மும்பை-சோலாப்பூர் இடையே போக்குவரத்தை மேம்படுத்துவதுடன் சோலாப்பூரில் சித்தேஸ்வர், சோலாப்பூர் அருகே அக்கல்கோட், துல்ஜாபுர், புனே அருகே ஆலந்தி ஆகிய முக்கியமான யாத்திரை மையங்களுக்கு பயணிக்க முடியும்.மும்பை-சாய்நாதர் ஷிர்டி வந்தே பாரத் ரயில், நாட்டின் 10-வது வந்தே பாரத் ரயிலாகும். இது மகாராஷ்ட்ராவில், நாசிக், திரிம்பகேஸ்வர், சாய்நகர் ஷிர்டி, ஷனி சிங்கனாப்பூர் ஆகிய முக்கிய யாத்திரை மையங்களின் போக்குவரத்தை இணைக்கும்.

இதைத் தொடர்ந்து மும்பையில் சாலைப் போக்குவரத்தின் நெரிசலைக் குறைப்பதற்காகவும், வாகனங்கள் நெரிசல் இன்றி, செல்லும் வகையில், சாந்தாக்ரூஸ் – செம்பூர் இணைப்புச் சாலை மற்றும் குரார் சுரங்கப் பாதையை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார். மேலும் மும்பை மரோலில் அல்ஜாமீயா-துஸ்-சைஃபியாவின் புது வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அல்ஜாமீயா-துஸ்-சைஃபியா என்பது தாவூதி போரா சமுதாயத்தினரின் முதன்மையான கல்வி நிறுவனமாகும். சையத்னா முஃபதல் சைஃபுதீன் வழிகாட்டுதலின்படி அச்சமுதாயத்தினரின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பாதுகாக்கும் வகையில், இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது: – இந்தியாவில் ரயில்வேக்கு இது ஒரு முக்கிய தினம் நாள், குறிப்பாக மகாராஷ்டிராவில் மேம்பட்ட இணைப்புக்கு இது ஒரு சிறந்த நாள், ஏனெனில் ஒரே நாளில் இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுவது இதுவே முதல் முறை. இந்த வந்தே பாரத் ரயில்கள் மும்பை மற்றும் புனே போன்ற பொருளாதார மையங்களை நம்பிக்கை மையங்களுடன் இணைக்கும், இதன் மூலம் கல்லூரி, அலுவலகம், வணிகம், யாத்திரை மற்றும் விவசாய நோக்கங்களுக்காக பயணிப்பவர்களுக்கு பயனளிக்கும் என்று அவர் விளக்கினார். புதிய வந்தே பாரத் ரயில்கள் மூலம் ஷீரடி, நாசிக், திரிம்பகேஷ்வர் மற்றும் பஞ்சவடி போன்ற புனிதத் தலங்களுக்கு பயணம் செய்வது எளிதாகும், இது சுற்றுலா மற்றும் புனித யாத்திரைக்கு ஊக்கமளிக்கும் என்று அவர் கூறினார். “பந்தர்பூர், சோலாப்பூர், அக்கல்கோட் மற்றும் துல்ஜாபூர் யாத்திரைகளும் சோலாப்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மூலம் அணுகக்கூடியதாக இருக்கும்” என்று அவர் கூறினார்.

வந்தே பாரத் ரயில் நவீன இந்தியாவின் பிரமாண்டமான பதிவு என்று பிரதமர் கூறினார். இது இந்தியாவின் வேகம் மற்றும் அளவின் பிரதிபலிப்பாகும் என்று அவர் கூறினார். வந்தே பாரத் ரயில்களின் தொடக்க வேகம் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர், நாட்டின் 17 மாநிலங்களில் உள்ள 108 மாவட்டங்களை இணைக்கும் வகையில் இதுவரை 10 வந்தே பாரத் ரயில்கள் இயக்கத் தொடங்கியுள்ளன என்று தெரிவித்தார். வாழ்க்கையை எளிதாக்கும் பல திட்டங்கள் இன்று தொடங்கப்பட்டதாக பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த உயர்த்தப்பட்ட சாலையானது கிழக்கு மற்றும் மேற்கு புறநகர் பகுதிகளை இணைக்கும் என்றும், பாதாள சாக்கடை முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் கூறினார்.

21ஆம் நூற்றாண்டில், இந்தியாவிற்கான பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார், ஏனெனில் இது மக்களின் வாழ்க்கையை மிகவும் எளிதாக்க வழிவகுக்கும். நவீன ரயில்கள், மெட்ரோ விரிவாக்கம் மற்றும் புதிய விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் தொடங்கப்படுவதற்குப் பின்னால் இந்த சிந்தனை உள்ளது. முதன்முறையாக ரூ.10 லட்சம் கோடி உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மட்டும் ஒதுக்கப்பட்டிருப்பதால், இந்தச் சிந்தனையை பட்ஜெட் மேலும் வலுப்படுத்துகிறது. இதில் ரயில்வேயின் பங்கு ரூ.2.5 லட்சம் கோடி. மகாராஷ்டிராவுக்கான ரயில் பட்ஜெட் முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்வைக் கண்டுள்ளது. இரட்டை எஞ்சின் அரசின் முயற்சியால், மகாராஷ்டிராவில் இணைப்பு விரைவாக முன்னேறும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினர் பலப்படுத்தப்பட்டுள்ளனர், இந்த ஆண்டு பட்ஜெட்டில் சம்பளம் பெறும் வர்க்கம், சொந்தமாக தொழில் செய்பவர்கள் ஆகிய இருவரின் தேவைகளும் கவனிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் சுட்டிக் கூறினார். 2014 ஆம் ஆண்டுக்கு முன்னர் ரூ. 2 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான வருமானம் உள்ளவர்களுக்கு வரி விதிக்கப்பட்டிருந்ததாகவும், தற்போதைய அரசு அதனை ஆரம்பத்தில் ரூ.5 இலட்சம் ஆகவும், தற்போது ரூ.7 இலட்சம் ஆகவும் இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் உயர்த்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 20% வரி செலுத்தியவர்கள் இன்று பூஜ்ஜிய வரி செலுத்துகிறார்கள் என்று பிரதமர் குறிப்பிட்டார். புதிய வேலைகளில் இருப்பவர்கள் இப்போது அதிகமாகச் சேமிக்கும் வாய்ப்பைப் பெற்றிருப்பதாகவும் அவர் எடுத்துரைத்தார்.

‘சப்கா விகாஸ் சப்கா பிரயாஸ்’ என்ற உணர்வை ஊக்குவிக்கும் இந்த பட்ஜெட் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பலத்தை அளிக்கும் என்றும், வளர்ந்த பாரதத்தை உருவாக்க அனைவரையும் ஊக்குவிக்கும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

Leave your comments here...