சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் பேருந்துகளில் முதற்கட்டமாக 50 ஜிபிஎஸ் வசதி அறிமுகம்..!

சமூக நலன்

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் பேருந்துகளில் முதற்கட்டமாக 50 ஜிபிஎஸ் வசதி அறிமுகம்..!

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் பேருந்துகளில் முதற்கட்டமாக 50 ஜிபிஎஸ் வசதி அறிமுகம்..!

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் கிட்டத்தட்ட 3,000 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பழைய பேருந்துகளாக இருந்தவை தற்போது புதியதாக மாற்றப்பட்டு இயக்கப்படுகின்றன. தற்போது 60% பேருந்துகள் புதிய பேருந்துக்காக இயக்கப்படுகின்றன. இதில் அடுத்தகட்டமாக பேருந்துகளில் பயணிகள் இறங்குவதற்கு வசதியாக, இறங்கும் இடம் வருவதற்கு முன்பு 100 மீட்டர் முன்பாகவே அறிவிக்கும் வகையில் ஜிபிஎஸ் கருவியை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது

தற்போது முதற்கட்டமாக 50 பேருந்துகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 21G அதாவது பூந்தமல்லியில் இருந்து அண்ணா சதுக்கம் வரை இயக்கப்படும் பேருந்து, அதேபோல் பூந்தமல்லியில் இருந்து திருவொற்றியூர் வரை இயக்கப்படும் 101 என்ற பேருந்தும், சென்னை பாரிமுனையில் இருந்து கேளம்பாக்கம் வரை இயக்கப்படும் 570 இந்து 3 பேருந்துகளில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தடம் கொண்ட 50 பேருந்துகளில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் படி பயணிகள் தாங்கள் இறங்குவதற்கு முன்பாக 100 மீட்டருக்கு முன்னதாக பேருந்தின் உள்ள பொருத்தப்பட்டுள்ள 6 ஒலிபெருக்கியின் மூலமாக அறிவிப்பு அளிக்கப்படுகிறது. இதன்முலம் நடத்துனரின் வேலை மிகவும் எளிதாக்கப்படுகிறது. விரைவில் மீதம் உள்ள 3,000 பேருந்துகளில் இந்த வசதி விரைவில் கொண்டுவரப்படும் என சென்னை போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

Leave your comments here...