மருத்துவம் தொடர்பான சர்ச்சை கருத்து – ஷர்மிகா பிப்.10ல் எழுத்துப்பூர்வ விளக்கம் தர உத்தரவு..!

தமிழகம்

மருத்துவம் தொடர்பான சர்ச்சை கருத்து – ஷர்மிகா பிப்.10ல் எழுத்துப்பூர்வ விளக்கம் தர உத்தரவு..!

மருத்துவம் தொடர்பான சர்ச்சை கருத்து –  ஷர்மிகா பிப்.10ல் எழுத்துப்பூர்வ விளக்கம் தர உத்தரவு..!

மருத்துவ டிப்ஸ் என்ற பெயரில் சித்த மருத்துவர் ஷர்மிகா யூட்யூப்பில் கொடுத்து வந்த சில அறிவுரைகள் சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. நுங்கு சாப்பிட்டால் மார்பகங்கள் பெரிதாகும், குப்புறப் படுத்தால் மார்பக புற்றுநோய் வரும், மாட்டுக்கறி சாப்பிட்டால் பல நோய்கள் வரும், 1 குலோப் ஜாமுன் சாப்பிட்டால் 3 கிலோ எடை கூடும் என பல்வேறு சர்ச்சை கருத்துகளை யூட்யூப்பில் தெரிவித்து வந்தார்.

இந்த வீடியோக்களை அடிப்படையாகக் கொண்டு அவர் மீது தவறான தகவலை பரப்புகிறார் என்று புகார் வந்தது. இதனையடுத்து, சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விளக்கம் கேட்டு இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியது. 15 நாட்களுக்குள் இந்திய மருத்துவ ஆணையர் மற்றும் தாளாளர் கொண்ட குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், மருத்துவர் ஷர்மிகா இன்று (ஜன.24) அரும்பாக்கம் சித்த மருத்துவ கல்லூரியில் உள்ள இயக்குனராக அலுவலகத்தில் உள்ள இந்திய மருத்துவ கவுன்சில் முன்பு ஆஜர் ஆகி விளக்கம் அளித்துள்ளார். இதையடுத்து புகார்கள் தொடர்பாக பிப்ரவரி 10ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து ஷர்மிகா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

முன்னதாக, “ஷர்மிகா பதிவுபெற்ற மருத்துவர் என்பதால், அவரது விளக்கத்தின் அடிப்படையில், அவர் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது முடிவு செய்யப்படும்” என்று இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஏற்கெனவே கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

Leave your comments here...