பொங்கல் பண்டிகைக்கு கரும்பு, முந்திரி கொடுக்கப்படாததற்கான காரணங்கள் குறித்து அமைச்சர் விளக்கம்..!

தமிழகம்

பொங்கல் பண்டிகைக்கு கரும்பு, முந்திரி கொடுக்கப்படாததற்கான காரணங்கள் குறித்து அமைச்சர் விளக்கம்..!

பொங்கல் பண்டிகைக்கு கரும்பு, முந்திரி கொடுக்கப்படாததற்கான காரணங்கள் குறித்து அமைச்சர்  விளக்கம்..!

பொங்கலுக்கு கொடுக்கும் பொருட்களையெல்லாம் புகார் சொல்கிறார்கள். எனவே, பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்கவே 1000 ரூபாயை முதல்வர் கொடுத்துள்ளார் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

மதுரையில் 114 கோடி ரூபாய் செலவில் மதுரை புதுநத்தம் சாலையில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை குடியிருப்பு வளாகத்தில், 2 லட்சத்து 40ஆயிரம் சதுர அடி பரப்பில், 7 தளங்களுடன் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயரில், சர்வதே தரத்தில் நுாலகம் அமைக்கப்பட்டு வருகிறது. நுாலகம் கட்ட 99 கோடி ரூபாயும், புத்தக கொள்முதல், புத்தகங்களை டிஜிட்டல் வழிக்கு மாற்ற 10 கோடி ரூபாய், தொழில்நுட்ப கருவிகள் வாங்க, 5 கோடி ரூபாய் என 114 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் நினைவு நூலக பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் அமைச்சர் மூர்த்தி, பொதுப்பணித்துறை அதிகாரிகள், மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளோடு இறுதிக் கட்டப்பணிகள் குறித்து பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, “தென்னகத்தை அடிப்படையாக வைத்து தான் கலைஞர் நூலகத்தை அமைக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் விரும்பினார். கலைஞர் நூலக கட்டிட பணிகள் ஜனவரி மாதத்திற்குள் முழுமையாக நிறைவு பெற்றுவிடும். கலைஞர் நூலக திறப்பு விழா குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார். 80 சதவீத முகப்பு மற்றும் தோரண வாயில் பணிகளும், குழந்தைகள் பிரிவில் 75 சதவீத பணிகளும், தமிழ்ப்பிரிவு தனியாக அமைக்கப்பட்டு வருகிறது. முழுமையாக அனைத்து பத்திரிக்கைகளையும் படிக்கும் வகையில் அமெரிக்காவில் உள்ளது போன்ற பர்னிச்சர்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது கலைஞர் நூலகத்தில் 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. விரைவில் நூலகம் திறக்கப்படும்.” என்றார்.

பொங்கலுக்கு கரும்பு கொடுக்கவில்லை என விவசாயிகள் போராட்டம், குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு, “பொங்கலுக்கு கரும்பு கொடுத்தால் அரைக்கரும்பு, முழுக்கரும்பு, கால்கரும்பு கொடுப்பதாக புகார் சொல்கிறார்கள். வெல்லம், முந்திரி கொடுத்தாலும் முந்திரி சின்னதாக இருக்கிறது; உடைந்துள்ளது; வெல்லம் ஒழுகுகிறது, ஏலக்காய் சிறியதாக உள்ளது என புகார் சொல்கிறார்கள். அதனால் தான் முதல்வர் பொங்கலுக்கு வேண்டியதெல்லாம் வாங்கி கொள்ள 1000 ரூபாய் கொடுத்து உள்ளார்.” என்றார்.

தமிழகத்தில் காலாவதியான 58 டோல்கேட் குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாகவும், ஜனவரி 3,4ஆம் ஆகிய தேதிகளில் டெல்லியில் அமைச்சர் நிதின் கட்கரியை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். அப்போது, பிரச்சினைகள் குறித்து எடுத்து கூற உள்ளதாகவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். மேலும், கப்பலூர், கிருஷ்ணகிரி டோல்கேட் குறித்து ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளேன். அவை காலாவதியான டோல்கேட்கள். பல சுங்கச்சாவடிகள் சாலை விரிவாக்கம் மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருவதால் 40 சசதவீத கட்டணம் பெற்றுக்கொள்ள கூறியுள்ளோம் எனவும் அவர் கூறினார்.

Leave your comments here...