உள்ளாட்சி தேர்தல்: ரஜினி, கமல் புறக்கணிப்பு : இரு கட்சிகள் எழுதிய நாடகம் என கமல் விமர்சனம்..!

அரசியல்

உள்ளாட்சி தேர்தல்: ரஜினி, கமல் புறக்கணிப்பு : இரு கட்சிகள் எழுதிய நாடகம் என கமல் விமர்சனம்..!

உள்ளாட்சி தேர்தல்: ரஜினி, கமல் புறக்கணிப்பு : இரு கட்சிகள் எழுதிய நாடகம் என கமல் விமர்சனம்..!

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27-ந்தேதி மற்றும் 30-ந்தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை மாவட்டம் தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களில் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதையொட்டி கிராம பஞ்சாயத்து தலைவர்கள், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு வேட்பாளர்களை நிறுத்த ஒவ்வொரு கட்சிகளும் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்களும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என கூறியுள்ளார்கள்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சிதலைவர் கமல்ஹாசன் கூறியதாவது:- உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாது. இந்த தேர்தலில் ஊழல் கட்சிகள் தங்களுக்குள் போட்டுக்கொண்ட வியாபார பங்கீடு மட்டுமே தேர்தலில் அரங்கேறும். இரு கட்சிகள் எழுதி, இயக்கும் அரசியல் நாடகத்தில் எந்த பாத்திரத்தையும் ஏற்கப்போவதில்லை. இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் பங்குபெறுவதால் கிட்டக்கூடிய முன்னேற்றம் சொற்பமானது. மக்கள் நலன் நோக்கிய பயணமாக இந்த உள்ளாட்சித் தேர்தல் இருக்கப்போவதில்லை. இனி வரும் ஐம்பது வாரங்களில் மக்கள் நலம்பேணி நற்பணிகள் செய்வோம். 2021 தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதே நமது லட்சியமாக இருப்பின் வெற்றி நிச்சயம்” என்று கூறியுள்ளார்.

இதைப்போல் உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று ரஜினி பரபரப்பான அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்:- இது தொடர்பாக ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில நிர்வாகியான வி.என்.சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் நமது அன்புத்தலைவர் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை.

ஆகையால் யாரும் ரஜினி மக்கள் மன்றத்தின் பெயரிலோ, ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரிலோ, மன்றத்தின் கொடியையோ, தலைவரின் பெயரையோ, புகைப் படத்தையோ பயன்படுத்தி வாக்குசேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave your comments here...