கமிஷன் பரிந்துரையை மீறி குமரியில் பிரச்னைக்குரிய இடங்களில் 54 சர்ச்சுகள் கட்ட அனுமதி – சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி நாகரில் உண்ணாவிரத போராட்டம் அறிவித்த பாஜக..!

அரசியல்தமிழகம்

கமிஷன் பரிந்துரையை மீறி குமரியில் பிரச்னைக்குரிய இடங்களில் 54 சர்ச்சுகள் கட்ட அனுமதி – சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி நாகரில் உண்ணாவிரத போராட்டம் அறிவித்த பாஜக..!

கமிஷன் பரிந்துரையை மீறி குமரியில் பிரச்னைக்குரிய இடங்களில் 54 சர்ச்சுகள் கட்ட அனுமதி – சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி நாகரில் உண்ணாவிரத போராட்டம்  அறிவித்த பாஜக..!

கன்னியாகுமரியில் பிரச்னைக்குரிய இடங்களில் 54 சர்ச்சுகள் கட்ட அனுமதி கொடுக்க முயற்சி நடப்பதாக பாஜக எம்.எல்.ஏ., எம்.ஆர்.காந்தி மற்றும் பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ் ஆகியோர் குற்றம்சாட்டி உள்ளனர்.

நாகர்கோவில் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி மற்றும் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் தர்மராஜ் ஆகியோர் நேற்று நாகர்கோவிலில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் கூட்டாக பேட்டி அளித்தனர்.

அப்போது கூறியதாவது:- குமரி மாவட்டத்தில் 1982-ம் ஆண்டு நடந்த மத கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து வேணுகோபால் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் வேணுகோபால் கமிஷனை மீறி மாவட்ட நிர்வாகம் பல வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி வழங்கி வருகிறது. இது கண்டனத்துக்கு உரியது. குமரி மாவட்டம் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே எங்களது நோக்கமாகும்.

எனவே வேணுகோபால் கமிஷன் பரிந்துரையை மீறி குமரி மாவட்டத்தில் புதிய வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மற்றும் தலைமை செயலாளரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். ஆனால் இதுவரை பதில் தரவில்லை. குமரி மாவட்டத்தில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி டிசம்பர் மாதம் 11-ந் தேதி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் பா.ஜ.க. சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அனைத்து சமூகத்தினரும் கலந்து கொள்ள உள்ளனர்.

அமைச்சர் மனோதங்கராஜ் சிறுபான்மையினரின் வாக்குகள் பா.ஜ. வுக்கு சென்றுவிடும் என்பதால் அவர் மீண்டும் ஒரு மதகலவரம் உருவாக்க முயல்கிறார். அதற்காக ஏற்கனவே பிரச்னையில் இருக்கும் இடங்களில் சர்ச் கட்ட கலெக்டரும், எஸ்.பி யும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். திங்கள் சந்தை புதுவிளையில் ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெறப்பட்ட பகுதியில் போலீஸ் பாதுகாப்போடு சர்ச் கட்டப்படுகிறது. புத்தளம் பகுதியில் 35 வருடமாக தடை செய்யப்பட்ட இடத்தில் இப்போது வழிபாட்டு தலமாக ஆக்க முயற்சிக்கிறார்கள். சமூக நலக்கூ டம், வீடு என அனுமதி பெற்று சர்ச் நடத்துகிறார்கள். இதுபற்றி பலமுறை கலெக்டர், எஸ்.பி.,யிடம் புகார் அளித்துள்ளோம்.

அதோடு மாவட்ட நிர்வாகம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது வருத்தம் அளிக்கிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர், மேயர், கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் கலந்து கொண்டனர். அதே சமயம் இந்த கூட்டத்தில் அமைச்சரின் மகனும் கலந்து கொண்டு உள்ளார். இது கண்டிக்கத்தக்கதாகும். இது போன்ற செயல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். பேட்டியின் போது மாநில செயலாளர் மீனாதேவ், உமாரதி ராஜன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Leave your comments here...